விவசாயிகளுக்கு கடன் வட்டி ரத்து: ஜெ.
சென்னை:
கூட்டுறவு வங்கியிலிருந்து விவசாயிகள் வாங்கிய கடனுக்கான வட்டியும், அபராத வட்டியும் தள்ளுபடிசெய்யப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கூட்டுறவு வங்கியிடமிருந்து விவசாயிகள் வாங்கிய கடனில், அவர்கள் கட்ட வேண்டிய தொகையை இந்த ஆண்டுஆகஸ்ட் மாதம் 31ம் தேதிக்குள் கட்டிவிட்டால், அவர்கள் வட்டியும், அபராத வட்டியும் கட்ட வேண்டியதில்லை.
மேலும், ரூ.310.53 கோடி அளவுள்ள வட்டியும், அபாரத வட்டியும் தள்ளுப்படி செய்யப்படுகிறது. கூட்டுறவுவங்கிகளுக்கு கட்டவேண்டிய வட்டியான ரூ.241.46 கோடியையும், ரூ.69.04 கோடியையும் அரசே கட்டிவிடும்.
இதுகுறித்து, தேசிய நபார்டிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. அதன் பின்பு வட்டியுைம், அபராதவட்டியையும் தள்ளுபடி செய்வது என்ற முடிவெடுக்கப்பட்டது.
எங்கள் அரசு முன்பு பதவியிலிருந்த போதே, விவசாயிகளுக்கு நன்மை பயக்கும்விதத்தில் இதே போன்றசலுகையை அளித்தது என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications