For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இடத்தை மாற்றியது அதிரடிப்படை முகாம்

By Staff
Google Oneindia Tamil News

சத்தியமங்கலம்:

சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிப்பதற்காக பண்ணாரியில் முகாமிட்டிருந்த அதிரடிப்படை தன்னுடைய இடத்தைமாற்றியுள்ளது. கரட்டூர் என்ற இடத்தில் புதிய முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

வீரப்பனைப் பிடிக்க அதிரடிப்படையினர் பல இடங்களில் குவிக்கப்பட்டுள்ளனர். இதில் பண்ணாரி முகாம் சிறப்புமுகாமாக செயல்பட்டு வந்தது.

ஆனால் இந்த முகாம் பண்ணாரியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறாக இருந்து வந்தது. மேலும்இந்தப் பகுதியில் அதிரடிப்படையினர் குப்பைகளைப் போட்டு வருவதாகப் புகார் கிளம்பியது.

இதையடுத்து இந்த முகாம் தற்போது வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர்என்ற இடத்தில் இந்த முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இனி இங்கிருந்தே அதிரடிப்படையினர் வீரப்பன்வேட்டையைத் துவங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் கன்னட நடிகர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா தொட்டகாசனூர் வரவிருக்கிறார். எனவேஇதையொட்டி தொட்டகாசனூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X