For Quick Alerts
For Daily Alerts
Just In
வட்டி ரத்து ஏன்? ஜெ.யிடம் கேட்கிறார் சுவாமி
சென்னை:
கஜானா காலியாக இருப்பதாகக் கூறும் முதல்வர் ஜெயலலிதா விவசாயிகளுக்கான வட்டியை ரத்துசெய்திருப்பதற்கான காரணத்தைத் தெளிவாக்க வேண்டும் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமிகூறியுள்ளார்.
இதுகுறித்து சென்னையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 7 லட்சம் விவசாயிகளின் கடனுக்கான வட்டிமற்றும் அபராத வட்டியை ரத்து செய்வதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
பதவியேற்ற முதல் நாளிலேயே அரசின் கஜானா காலியாக இருப்பதாகக் கூறிய அவர் தற்போது ரூ.300கோடிக்கும் மேல் உள்ள வட்டி மற்றும் அபராத வட்டியை ரத்து செய்வதாக கூறியிருப்பது ஏன்?
இந்த சலுகை மூலம் அரசுக்கு நஷ்டம் ஏற்படும் என்பது அவருக்குத் தெரியாதா? இதுகுறித்து மக்களுக்கு விளக்கவேண்டியது அவரது கடமை என்று கூறியுள்ளார்.
Story first published: Wednesday, June 13, 2001, 5:30 [IST]