ஜெ.யின் முன்னாள் வளர்ப்பு மகன் கைது
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் வி.என். சுதாகரன் புதன்கிழமை அதிகாலைசென்னையில் கைது செய்யப்பட்டார்.
சுதாகரன் நற்பணி மன்றத்தின் மாநில அமைப்பாளராக இருந்த கோபி ஸ்ரீதரன் என்பவரை சுதாகரனும் அவரதுமைத்துனரும் பணம் கேட்டு தொடர்ந்து மிரட்டி வந்தனர்.
செவ்வாய்க்கிழமை இரவு ஸ்ரீதரனுக்கு தொலைபேசி செய்து அவரை தனதி வீட்டிற்கு வருமாறு அழைத்தார்சுதாகரன். இதையடுத்து ஸ்ரீதரன் தனது காரில் தனது உதவியாளர் முத்துராமன் என்பவருடன் சுதாகரன் வீட்டிற்குசென்றார்.
அங்கு சுதாகரன், அவரது மைத்துனர் மற்றும் 10 பேர் இருந்தனர். ஸ்ரீதரனிடம் பணம் கேட்டு துப்பாக்கியைக் காட்டிசுதாகரன் மிரட்டினார். இதைக்கண்டு பயந்துபோன ஸ்ரீதரன் தன் உதவியாளருடன் தப்பி வந்துவிட்டார்.
ஆனால் சுதாகரனின் மைத்துனரும் வேறு 6 பேரும் சபாரி கார் மூலம் ஸ்ரீதரனை துரத்தி வந்தனர். துப்பாக்கி,உருட்டை போன்றவற்றுடன் வந்து ஸ்ரீதரனையும், முத்துராமனையும் அவர்கள் தாக்கினர். துப்பாக்கியைக் காட்டிஅவரை கொன்று விடுவதாகவும் மிரட்டினர்.
ஸ்ரீதரனின் மனைவி போலீசுக்கு புகார் செய்ய முயன்றதும், அவர்கள் தப்பி ஓடி விட்டனர். காயமடைந்த ஸ்ரீதரன்இது குறித்து பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் செய்ததும், புதன்கிழமை அதிகாலை 2.45 மணிக்கு சுதாகரன்கைது செய்யப்பட்டார்.
சென்னை மாநகர காவல்துறை உதவி ஆணையர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் அவரைக் கைதுசெய்தனர். அவருடைய வீட்டிலிருந்து 1 பாக்கெட் அபினும் கைப்பற்றப்பட்டது.
அவர் முதலில் மாம்பலம் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டார். பின்னர் சைதாப்பேட்டை காவல் நிலையத்ற்குகொண்டு செல்லப்பட்டார். அவர் மீது இ.பி.கோ. 307வது பிரிவின்படி, கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்யப்பட்டது.
பின்னர் அவர் சென்னை 11வது பெருநகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் நீதிமன்றகாவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து சுதாகரன் சென்னை மத்திய சிறையில்அடைக்கப்பட்டார்.
காயமடைந்த ஸ்ரீதரனும், அவரது உதவியாளரும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னர் முதல்வராக இருந்தபோது, தன் தோழி சசிகலாவின் அக்காள் மகனான சுதாகரனை வளர்ப்பு மகனாக தத்துஎடுத்துக் கொண்டார் ஜெயலலிதா. அவருக்கு நடிகர் சிவாஜிகணேசனின் பேத்தியையும் திருமணம் செய்துவைத்தார். அந்த திருமணம் நாட்டையே ஒரு கலக்கு கலக்கியது. மிக விமரிசையாக அந்த திருமணம்நடைபெற்றது.
இதன் காரணமாகவே, 1996ல் நடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியடைந்தது. இதைத்தொடர்ந்து, சுதாகரன் இனி தன் வளர்ப்பு மகன் இல்லை என ஜெயலலிதா அறிவித்துவிட்டார்.
தற்போது ஆட்சி பீடத்தில் அ.தி.மு.க. மீண்டும் அமர்ந்துள்ளது. ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றுள்ளார்.ஊழலற்ற ஆட்சி தருவேன் என உறுதியளித்த ஜெயலலிதா கடந்த தி.மு.க. ஆட்சியில் நடந்த ஊழல்களை தோண்டிஎடுத்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தீவிரமாக இருக்கிறார்.
இந்நிலையில் சுதாகரன் கைது செய்யப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications