துப்பாக்கிக் கொள்ளை வழக்கு மாற்றம்
கோவை:
வெள்ளித் திருப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் நடந்த துப்பாக்கிக் கொள்ளைச் சம்பவ வழக்கு, கோவை வெடிகுண்டுவழக்கு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
வெள்ளித் திருப்பூரில் கடந்த 98ம் ஆண்டு துப்பாக்கிகளை வீரப்பன் கூட்டாளிகள் எனக்கருதப்படும் சிலர்கொள்ளையடித்துச் சென்றனர்.
இந்த வழக்குத் தாடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து சத்தியமூர்த்தி, மணிகண்டன் உட்பட 5 பேரைக் கைதுசெய்தனர். இவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சத்தியமூர்த்தி திருச்சி சிறையில் இருந்துவருகிறார்.
இந்த வழக்கு ஈரோடு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதற்காக சத்தியமூர்த்தி ஈரோடு நீதிமன்றத்தில்செவ்வாய்க்கிழமை ஆஜர் செய்யப்பட்டார். இவரது காவலை ஜூன் 26ம் தேதி வரை நீட்டித்து நீதிபதிஉத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கு கோவை வெடிகுண்டு வழக்குகளை விசாரித்து வரும் தனி நீதிமன்றத்திற்குமாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் வழக்கு விரைந்து முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.