சென்னைக்கு வெளியூரிலிருந்து குடிநீர்: ஜெ.
சென்னை:
சென்னையில் நிலவிவரும் தண்ணீர் பஞ்சத்தை தீர்ப்பதற்காக அண்டை மாவட்டங்களிலிருந்து ரயில், லாரி முலமும்தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், சென்னையில் நிலவி வரும் குடிநீர் பஞ்சத்தைதீர்ப்பதற்காக ஈரோட்டிலிருந்தும், மேட்டூரிலிருந்தும் ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரப்படும்.நெய்வேலியிலிருந்து லாரி மூலம் குடிநீர் கொண்டு வரப்படும்.
நாள் ஒன்றுக்கு 1.5 மில்லியன் லிட்டர் குடிநீர் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்பு நான் முதல்வராக இருந்தபோது, 1993ம் ஆண்டு குடிநீர் பஞ்சம் நிலவியது. அப்போது இது போன்றநடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
ரயில் மூலம் இந்த மாதம் 21ம் தேதி குடிநீர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாகவே,நெய்வேலியிலிருந்து லாரி மூலம் குடிநீர் வந்துவிடும் என்றார்.
ரயில்மூலம் குடிநீர் கொண்டுவருவது பற்றி தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் ஜெயலலிதா பேச்சுவார்த்தைநடத்தியுள்ளார்.
யு.என்.ஐ












Click it and Unblock the Notifications