குற்றப்பத்திரிக்கைகளைப் பெற்றார் தினகரன்
சென்னை:
அமலாக்கப்பிரிவினர் தொடர்ந்த 4 வழக்குகளில் டி.டி.வி. தினகரனுக்கு புதன்கிழமை குற்றப்பத்திரிக்கைவழங்கப்பட்டது.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடைய தோழி சசிகலாவின் அக்காள் மகன் தினகரன். இவர் தற்போது அ.தி.மு.க.எம்.பி.யாக இருக்கிறார்.
கடந்த 1994-95ம் ஆண்டு அமலாக்கப்பிரிவினர் இவர் மீது 4 வழக்குகளைத் தொடர்ந்தனர்.
மலேசியாவில் 5 லட்சம்அமெரிக்க டாலர் முதலீடு செய்தது, 90 ஆயிரம் சிங்கப்பூர் டாலரை ரங்கேஷ் என்பவர்மூலமாக சிங்கப்பூரில் முதலீடு செய்தது, 36 லட்சத்து 36 ஆயிரம் அமெரிக்க டாலரையும் 1 லட்சம் பவுண்ட்ஸையும்பிரிட்டனில் முதலீடு செய்தது ஆகிய 4 வழக்குகள் தினகரன் மீது அமலாக்கப்பிரிவினரால் தொடரப்பட்டுள்ளன.
இந்த 4 வழக்குகளிலும் தினகரனுக்கு புதன்கிழமை குற்றப்பத்திரிக்கைகள் வழங்கப்பட்டன. சென்னை எழும்பூர்பொருளாதார 2வது குற்றவியல் நீதிபதி பெருமாள் முன்பு தினகரன் ஆஜராகி, குற்றப்பத்திரிக்கைகளைப் பெற்றுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications