சென்னையில் ரூ.4.5 கோடி தங்கம் பிடிபட்டது
சென்னை:
சென்னையில் ரூ. 4.5 கோடி பெறுமானமுள்ள கடத்தல் தங்கம் பிடிபட்டது.
சென்னை அருகே போலீஸார் வழக்கமான சோதனைப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போதுசந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு ஜீப் வந்தது. அதை நிறுத்திய போலீஸார் ஜீப்பிற்குள் சோதனை போட்டனர்.
அப்போது ஜீப் சீட்டுகளுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கக் கட்டிகளை கண்டுபிடித்தனர். 110 கிராம்எடையுள்ள 900 தங்கக் கட்டிகள் பிடிபட்டன. இந்த தங்கக் கட்டிகளின் மீது வெளிநாட்டு முத்திரைகள்காணப்பட்டன.
வெளிநாட்டிலிருந்து இந்தத் தங்கக் கட்டிகள் கடத்தப்பட்டு வந்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.இதுதொடர்பாக 4 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது.
சென்னையில் சமீப காலத்தில் இவ்வளவு பெரிய தொகையிலான தங்கக் கட்டிகள் பறிதல் செய்யப்பட்டதில்லைஎன்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, மற்றொரு சம்பவத்தில் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள வெள்ளி நகைகளைக் கடத்தியதாக 6 பேரையும்போலீஸார் கைது செய்தனர்.
சென்னை நகரக் காவல்துறை கமிஷனர் முத்துக்கருப்பன் செய்தியாளர்களிடம் இந்தத் தகவல்களைத் தெரிவித்தார்












Click it and Unblock the Notifications