தமிழக ஆளுநருக்கு டெல்லி அவசர அழைப்பு
சென்னை:
மத்திய அரசு அழைப்பின் பேரில் தமிழக ஆளுநர் திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
ஊழல் வழக்கில் தண்டனை பெற்றதால், ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படவில்லை. ஆனாலும்,தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதையடுத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒரு மனதாக ஜெயலலிதாவையேசட்டசபை தலைவராக தேர்ந்தெடுத்தனர்.
இதையடுத்து, தமிழக ஆளுநர் பாத்திமா பீவி, ஜெயலலிதாவை முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.இது தவறு என கூறியும், இதனால் ஆளுநரை திரும்பப் பெறுமாறும் மத்திய அரசை தி.மு.க.வும், தமிழக பா.ஜ.க.வும்மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், பாத்திமா பீவியை மத்திய அரசு டெல்லிக்கு அழைத்துள்ளதாகவும், வியாழக்கிழமை காலை அவர்டெல்லி கிளம்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து ஆளுநர் மாளிகை அதிகாரிகள் தெரிவிக்கையில்,ஆளுநர் டெல்லிக்கு சென்றுள்ளதற்கான காரணம் தெரியவில்லை என்றனர்.
ஆனாலும், மவுலான அபுல் கலாம் ஆசாத் கட்டுரைப் போட்டிக்குத் தலைவராக பாத்திமா பீவி இருப்பதால், அதுதொடர்பாகத்தான் அவர் டெல்லி சென்றுள்ளார். எந்த விதமான காரணமும் கிடையாது எனவும் கூறப்படுகிறது.