கோவையில் இருதய நோய் மாநாடு
கோவை:
கோவையில் இருதய நோய் பற்றி அகில இந்திய அளவிலான மாநாடு நடக்கிறது. இதில், 500க்கும் மேற்பட்டடாக்டர்கள் பங்கேற்கின்றனர்.
இருதய நோய் பற்றிய அகில இந்திய அளவிலான மாநாடு கோவையில் வரும் ஜூன் 16, 17 ஆகிய இரு நாட்கள்நடக்கிறது. இந்த மாநாட்டில் இந்திய அளவில் உள்ள டாக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் 500 பேர்பங்கேற்கின்றனர்.
கோவை ராமகிருஷ்ணா திருமண மண்டபத்தில் இந்த மாநாடு நடக்கிறது. இதனையொட்டி இருதய நோய் பற்றியசிறப்புக் கண்காட்சியும் இடம் பெறுகிறது. கோவையில் ஆண்டுக்கு 1500 பேருக்கும் மேல் இருதய அறுவைசிகிச்சை நடக்கிறது. இங்குள்ள முக்கிய மருத்துவமனைகள் மட்டுமே இந்த சிகிச்சையை அளிக்கும் வசதியைக்கொண்டுள்ளன. ஆஞ்சியோகிராம் என்ற பரிசோதனை ஆண்டுக்கு 5000 பேருக்கு மேற்கொள்ளப்படுகிறது.
எனவே, கோவையில் இந்த மருத்துவ மாநாட்டில் இருதய நோய்க்கான காரணங்கள் குறித்து விரிவான ஆய்வுநடத்தப்படும். மேலும், இந்த நோய் வராமல் தடுக்க எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளலாம், முதலுதவி பற்றியவிழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்தும் முடிவு செய்யப்படும்.
இதற்கான ஏற்பாடுகளை இருதய நோய் மருத்துவ சங்கத்தின் டாக்டர் விஸ்வநாதன் செய்து வருகிறார். இதனைபாரதிய வித்யா பவன் சேர்மன் டாக்டர் கிருஷ்ணராஜ் வானவராயர் துவக்கி வைக்கிறார்.












Click it and Unblock the Notifications