கட்டாய கல்யாணம்... இளம் பெண் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

கோவை:

கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் செய்ததால், மணப்பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவை அருகே உள்ள அவினாசிபாளையத்தைச் சேர்ந்தவர் அரிச்சந்திரன். இவரதுமகள் சங்கீதா (16).

அதே பகுதியைச் சேர்ந்த செந்தில் (26) என்பவர், சங்கீதாவைத் திருமணம் செய்து கொள்ள விரும்பி, கடந்த 6மாதமாக காதலிக்க முயன்று கொண்டிருந்தார். ஆனால், முடியவில்லை. எனவே சங்கீதாவை மணக்க முடிவுசெய்து சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தார். கடந்த புதனன்று சங்கீதா மட்டும் தனியாக வீட்டில் இருப்பதை அறிந்தார்.

உடனே வீட்டிற்குச் சென்று சங்கீதாவைக் கடத்திச் சென்றார். பின்னர் ஒரு கோயிலில் வைத்து சங்கீதாவுக்குத் தாலிகட்டி கட்டாயத் திருமணம் செய்து கொண்டார். தாலி கட்டியவுடன் சங்கீதா அழ ஆரம்பித்தார்.

பின்னர் பெற்றோர் வீட்டிற்குச் செல்ல வேண்டும் எனக் கூறிவிட்டு, அங்கு சென்றார். அப்போது பெற்றோர்கள்சங்கீதாவைக் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+