மானியம் பெற தொழிலதிபர்கள் டெல்லி பயணம்
திருப்பூர்:
மத்திய அரசு ரத்து செய்த பனியன் தொழிலுக்கான மானியத்தை திரும்ப பெறும் முயற்சியாக கோவை எம்.பி.தலைமையில் 15 தொழிலதிபர்கள் பேச்சுவார்த்தைக்காக டில்லி சென்றுள்ளனர்.
திருப்பூர் பனியன் தாழிலுக்கு மத்திய அரசு "டிராபேக் என்ற ஏற்றுமதிக்கான மானியம் அளித்து வந்தது. இந்தமானியம், ஏற்றுமதி செய்யும் தொழிலதிபர்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது. ரூ.52 ஆக இருந்த இந்தமானியத்தை ரூ.10 ஆக குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டது.
இதனால், மானியத்தை நம்பி ஏற்றுமதியில் ஈடுபட்ட தொழிலதிபர்கள் பெரும் நஷ்டத்தை எதிர்கொள்ள வேண்டியசூழ்நிலை ஏற்பட்டது. எனவே, இந்த மானியத்தை திரும்பவும் அளிக்க வேண்டும் என தொழில் அமைப்புகளின்கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
எனவே, இந்த பிரச்னையைக்கு தீர்வு காண மத்திய அமைச்சர்கள், அதிகாரிகளை நேரில் சந்திக்கவும், பனியன்தொழிலில் ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்து தெரிவிக்கவும் கோவை எம்.பி. ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு குழுடில்லி செல்கிறது.
இதில் முன்னாள் தமாகா எம்.எல்.ஏ.வும், திருப்பூர் பனியன் தொழில் அதிபர்களின் கூட்டமைப்புத் தலைவருமானமோகன் கந்தசாமியும் செல்கிறார். இந்தக் குழுவில் 15 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இவர்கள், மத்திய அரசிடம், பருத்திக்கு விதிக்கப்பட்டுள்ள 8 சதவீத வரியை விலக்க வேண்டும். ஏற்றுமதி மீதான16 சதவீத வரியையும் விலக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்துவர்.