கருணாநிதி -- தாமரைக்கனி சந்திப்பு
சென்னை:
முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. தாமரைக்கனி வெள்ளிக்கிழமை திராவிட முன்னேற்றக் கழக தலைவர்கருணாநிதியைச் சந்தித்து திமுகவில் இணைய விரும்புவதாக தெரிவித்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியின் அசைக்க முடியாத அரசியல்வாதியாக இருந்த தாமரைக்கனி கடந்த சட்டசபைத்தேர்தலில் சொந்த மகனாலேயே தோற்கடிக்கப்பட்டார். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட தாமரைக்கனி தேர்தல்தோல்வியையடுத்து திமுகவில் சேர முடிவு செய்தார்.
வழக்கு காரணமாக நிபந்தனை ஜாமீனில் இருந்த தாமரைக்கனிக்கு சில நாட்களுக்கு முன்பு நிபந்தனைதளர்த்தப்பட்டது. இதையடுத்து அவர் வெள்ளிக்கிழமை சென்னைக்கு வந்தார். திமுக தலைமை அலுவலகமானஅண்ணா அறிவாலயத்திற்கு காலையில் வந்த அவர் திமுக தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகன்ஆகியோரைச் சந்தித்தார். அப்போது திமுகவில் இணைய விரும்புவதாக தெரிவித்தார்.
தாமரைக்கனி ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி மக்களின் அன்பைப் பெற்றவர். அந்தத் தொகுதியில் 5 முறை வெற்றிபெற்றவர்.
திமுகவில் சேர்ந்தது ஏன் என்பது குறித்து தாமரைக்கனி செய்தியாளர்களிடம் கூறுகையில், திராவிடஇயக்கங்களில் மூத்த இயக்கம் திக. தற்போதுள்ள அரசியல் தலைவர்களில் பண்பாடான, மூத்த, உண்மையானதலைவர் கருணாநிதிதான். மேலும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டவர் கருணாநிதி. அண்ணாவுக்குப் பிறகு திமுக தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தபோது அமோகஆதரவுடன் தலைவரானவர் கருணாநிதி.
ஒட்டுமொத்தமாக பார்க்கப் போனால் அனைத்துத் தரப்பினராலும் தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கருணாநிதி மட்டுமே அதன் காரணமாகவே திமுகவில் இணைத்துக் கொள்ள முடிவு செய்தேன் என்றார்.
தாமரைக்கனியை திமுகவில் சேர்த்துக் கொள்வது குறித்து மாவட்ட திமுக செயலாளருடன் பேசி முடிவுசெய்யப்படும் என்று பின்னர் கருணாநிதி குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications