கருணாநிதி மீது அல் உம்மா புகார்
கோவை:
கருணாநிதி ஆட்சி காலத்தில் சிறையில் நாங்கள் சித்ரவதை செய்யப்பட்டோம் என்று அல் உம்மா இயக்கத்தின்பொதுச்செயலாளர் அன்சாரி புகார் கூறியுள்ளார்.
கோவை குண்டு வெடிப்புச் சம்பவத்தில் அல் உம்மா இயக்கம் தடை செய்யப்பட்டது. குண்டு வெடிப்புச் சம்பவம்தொடர்பான வழக்கில் அல் உம்மா இயக்கத் தலைவர் பாட்ஷா, பொதுச் செயலரான அன்சாரி ஆகியோர் உள்பட200க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் சிறையில் இருந்து வருகின்றனர்.
சிறையில் உள்ள அன்சாரி வெள்ளிக்கிழமை மாலை வேறு ஒரு வழக்கிற்காக நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார். நீதிமன்ற வளாகத்தில், அவர் அழைத்து வரப்பட்ட போலீஸ் வேனில் இருந்தபடியே நிருபர்களுக்குஅவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
குண்டு வெடிப்பு வழக்கில் நாங்கள் கடந்த 3 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறோம். இன்னும் விசாரணைதுவக்கப்படவில்லை.
சிறையில் உள்ள முஸ்லிம்கள் திமுக ஆட்சியில் சித்ரவதைக்குள்ளாகி இருப்பதாக முன்னாள் முதல்வர்கருணாநிதி மற்றும் உள்துறை செயலர்கள் மீது புகார் தெரிவித்துள்ளனர். இது அதிமுக செயலர் போட்ட வழக்கு.பாதிக்கப்பட்ட சிறையில் இருந்து வரும் முஸ்லிம்கள் யாரும் புகார் தெரிவிக்கவில்லை.
கருணாநிதி ஆட்சி காலத்தில் சிறையில் கொடுமை நடப்பதாக நாங்கள் பலமுறை நீதிமன்றத்தில் புகார் கூறியும்,காவல் துறையிடம் மனுக் கொடுத்தும் பயன் இல்லை. அப்போது எதிர்க் கட்சிகள் சட்டமன்றத்தில் புகார்கூறியதையடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த விசாரணை வெறும் கண்துடைப்பாகவே முடிந்தது. நாங்கள் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக சூரியனைக்கூட பார்க்க முடியவில்லை, இருட்டறைக்குள் இருந்து வருகிறோம்.
எங்கள் மீது தொடரப்பட்ட குண்டு வெடிப்பு வழக்கு 3 ஆண்டுகளாகியும் இன்னும் விசாரணை மேற்கொள்ளப்படவில்லை. எனவே, அதிமுக ஆட்சியில் நல்லது நடந்தால் சரி என்றார் அன்சாரி.
தற்போது அல் உம்மா இயக்கத்தைத் தடை செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications