கருணாநிதி மீது அல் உம்மா புகார்
கோவை:
கருணாநிதி ஆட்சி காலத்தில் சிறையில் நாங்கள் சித்ரவதை செய்யப்பட்டோம் என்று அல் உம்மா இயக்கத்தின்பொதுச்செயலாளர் அன்சாரி புகார் கூறியுள்ளார்.
கோவை குண்டு வெடிப்புச் சம்பவத்தில் அல் உம்மா இயக்கம் தடை செய்யப்பட்டது. குண்டு வெடிப்புச் சம்பவம்தொடர்பான வழக்கில் அல் உம்மா இயக்கத் தலைவர் பாட்ஷா, பொதுச் செயலரான அன்சாரி ஆகியோர் உள்பட200க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் சிறையில் இருந்து வருகின்றனர்.
சிறையில் உள்ள அன்சாரி வெள்ளிக்கிழமை மாலை வேறு ஒரு வழக்கிற்காக நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார். நீதிமன்ற வளாகத்தில், அவர் அழைத்து வரப்பட்ட போலீஸ் வேனில் இருந்தபடியே நிருபர்களுக்குஅவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
குண்டு வெடிப்பு வழக்கில் நாங்கள் கடந்த 3 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறோம். இன்னும் விசாரணைதுவக்கப்படவில்லை.
சிறையில் உள்ள முஸ்லிம்கள் திமுக ஆட்சியில் சித்ரவதைக்குள்ளாகி இருப்பதாக முன்னாள் முதல்வர்கருணாநிதி மற்றும் உள்துறை செயலர்கள் மீது புகார் தெரிவித்துள்ளனர். இது அதிமுக செயலர் போட்ட வழக்கு.பாதிக்கப்பட்ட சிறையில் இருந்து வரும் முஸ்லிம்கள் யாரும் புகார் தெரிவிக்கவில்லை.
கருணாநிதி ஆட்சி காலத்தில் சிறையில் கொடுமை நடப்பதாக நாங்கள் பலமுறை நீதிமன்றத்தில் புகார் கூறியும்,காவல் துறையிடம் மனுக் கொடுத்தும் பயன் இல்லை. அப்போது எதிர்க் கட்சிகள் சட்டமன்றத்தில் புகார்கூறியதையடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த விசாரணை வெறும் கண்துடைப்பாகவே முடிந்தது. நாங்கள் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக சூரியனைக்கூட பார்க்க முடியவில்லை, இருட்டறைக்குள் இருந்து வருகிறோம்.
எங்கள் மீது தொடரப்பட்ட குண்டு வெடிப்பு வழக்கு 3 ஆண்டுகளாகியும் இன்னும் விசாரணை மேற்கொள்ளப்படவில்லை. எனவே, அதிமுக ஆட்சியில் நல்லது நடந்தால் சரி என்றார் அன்சாரி.
தற்போது அல் உம்மா இயக்கத்தைத் தடை செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications