ஆயுள்தண்டனை கைதி காசநோயால் சாவு
Subscribe to Oneindia Tamil
கோவை:
ஆயுள் சிறைத் தண்டனை பெற்ற கைதி காசநோயால் இறந்தார்.
கோவை சிறையில் ஏற்காட்டைச் சேர்ந்த சின்னமணி (52) என்பவர் இருந்து வந்தார். அவர் சில ஆண்டுகளுக்குமுன்னர் ஒரு கொலை வழக்கில், ஆயுள் தண்டனை பெற்றார்.
இந்த தண்டனையை அனுபவித்து வந்த அவர் காசநோயால் பாதிக்கப்பட்டார். எனவே, கோவை அரசுமருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இறந்த அவரது உடல் அவரது சொந்த ஊரான ஏற்காட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்டது.












Click it and Unblock the Notifications