கவுன்சிலிங் மூலம் ஆசிரியர்கள் டிரான்ஸ்பர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆசிரியர் பணியிட மாற்றத்திற்கான கவுன்சிலிங் தமிழகம் முழுவதிலும் சனிக்கிழமை துவங்கியது.
கணவனும், மனைவியும் ஒரே இடத்தில் பணியாற்றுவதற்கு வசதியாக பணியிட மாற்றம் கோரி ஆசிரியர்கள்விண்ணப்பிக்கலாம் என்றும், கவுன்சிலிங் முறை மூலம் பரஸ்பர இடமாற்றத்திற்கு வகை செய்யப்படும் என்றும்தமிழக அரசு அறிவித்திருந்தது.
"ஒளிவுமறைவில்லாத பணியிட மாறுதல் திட்டம்" என்று இதற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த கவுன்சிலிங் முறை சனிக்கிழமை தமிழகம் முழுவதிலும் துவங்கியது. ஏராளமான ஆசிரியர்கள் இந்த முகாமில்கலந்து கொண்டு தங்களுக்கு விருப்பமான இடத்தைத் தெரிவித்து பணியிட மாறுதல் கோரினார்கள்.












Click it and Unblock the Notifications