For Daily Alerts
Just In
கடும் சண்டை: 14 புலிகள் சாவு
கொழும்பு:
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே நடந்த கடும் மோதலில் 14 புலிகளும், 2ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர் என்று ராணுவ செய்தித்தொடர்பாளர் சனத் கருணாரத்னே தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
மன்னார் மாவட்டத்தில் ராணுவ வீரர்கள், புலிகள் மீது நடத்திய தாக்குதலில் 10 விடுதலைப்புலிகள்கொல்லப்பட்டனர்.
முல்லைத்தீவு பகுதியில் கடற்படை வீரர்கள் நடத்திய தாக்குதலில் 2 புலிகள் சம்பவ இடத்திலேயேகொல்லப்பட்டனர். அதே போல் மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் பகுதியில் ராணுவ வீரர்கள் நடத்தியதாக்குதலில் 2 புலிகள் கொல்லப்பட்டனர். இந்த சண்டையில் 2 ராணுவ வீரர்களும் பலியானார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Comments
Story first published: Saturday, June 16, 2001, 5:30 [IST]