சுதாகரனின் 3 கார்கள் பறிமுதல்
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனின் வீட்டை சோதனையிட்ட போலீசார் அவர்வீட்டிலிருந்த 3 கார்களை கைப்பற்றினர்.
ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகனான சுதாகரன் மீது கொலைமிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டுபாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவரது வீட்டை போலீசார் சோதனையிட்டனர். அப்போது வீட்டில் எத்தனை அறைகள் உள்ளன.அவற்றில் எதையெல்லாம் சுதாகரன் பயன்படுத்தினார். அந்த அறைகளில் ஏதேனும் ஆவணங்கள் உள்ளதா எனபோலீசார் சோதனையிட்டனர்.
அதன்பின் சுதாகரன் பயன்படுத்திய வாகனங்களின் எண்ணிக்கையையும் போலீசார் பதிவு செய்து கொண்டுசென்றனர்.
அதன்பின் மீண்டும் திரும்பி வந்த போலீசார் சுதாகரன் பயன்படுத்திய சஃபாரி கார், அவரது உதவியார்கள்பயன்படுத்திய வேன் மற்றும் சுதாகரனின் தந்தை பயன்படுத்தி வந்த டாடாசியாரா கார் ஆகிய மூன்றுவாகனங்களையும் போலீசார் கைப்பறிக் கொண்டு சென்றனர்.