"டிரா பேக்" குறைப்புக்கு பனியன் ஆலைகள் எதிர்ப்பு
திருப்பூர்:
திருப்பூரில் "டிரா பேக் குறைக்கப்பட்டதை எதிர்த்து தொகுதி முழுவதும் வரும் ஜூன் 21 ம் தேதி பந்த் நடத்தஅனைத்துக் கட்சிகளும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.
திருப்பூரில் பனியன் தொழிற்சாலைகள் ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ளன. இந்த தொழிற்சாலை அதிபர்கள்ஏற்றுமதிக்காக சுங்க வரி செலுத்துகின்றனர். ஏற்றுமதிக்குச் செலுத்தப்படும் இந்த சுங்க வரியில் 15 சதவீதத்தைஊக்கத் தொகையாக மீண்டும் அவர்களுக்கு அரசு வழங்கும். இந்த முறைக்கு "டிராபேக்" என்ற பெயர் உண்டு.
இந்த சலுகை இதுவரை 15 சதவீதமாக இருந்து வந்தது. இந்த சலுகையைத் தற்போது மத்திய அரசு 15சதவீதத்திலிருந்து 9.5 சதவீதம் முதல் 5.5 சதவீதமாக குறைத்துள்ளது. இதனால் ஏற்றுமதியாளர்கள் கடும்பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். பலர் ஏற்றுமதியை நிறுத்த வேண்டிய சூழ்நிலையிலும் உள்ளனர்.
இதனால் திருப்பூரில் தொழிற்சாலைகள் பல இயக்கப்படமால் மூடப்படக் கூடும். தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழப்பார்கள் எனவும் அரசியல் கட்சிகள் கருதின.
இது குறித்த பொதுவான விவாதம் அனைத்துக் கட்சிகளின் சார்பாக நடந்தது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சித் தலைவர் கோவிந்தசாமி தலைமை வகித்தார். திருப்பூர் நகரச் சேர்மன் செல்வராஜ் (திமுக), சக்திவேல்(அதிமுக), காமராஜ் (சிபிஎம்), பழனிச்சாமி (சிபிஐ), தங்கவேல் (தமாகா), சேகர் (மதிமுக), தண்டபாணி (காங்கிரஸ்),ராஜேந்திரன் (பாமக) ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இவர்கள் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தில் "டிராபேக்" சலுகையை மத்திய அரசு குறைத்ததைத் திரும்ப வழங்கவேண்டும் . இதனை வலியுறுத்தி மத்திய அரசின் கவனத்தைக் கவர, வரும் ஜூன் 21ம் தேதி அனைத்துக்கட்சிகளின் சார்பில் திருப்பூர் தொகுதி முழுவதிலும் பந்த் நடத்த தீர்மானிக்கப்படுகிறது. அன்று காலை 6 மணி முதல்மாலை 6மணி வரை இந்த பந்த் நடக்கும் என முடிவு செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications