சென்னைக்கு ரயிலில் வருகிறது குடிநீர்
சென்னை:
ஈரோட்டிலிருந்து ரயில் மூலம் குடிநீர் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
சென்னையில் தலைவிரித்தாடும் தண்ணீர்ப் பிரச்சினையை சமாளிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளைஎடுத்து வருகிறது. நெய்வேலியிலிருந்து லாரிகள் மூலம், ஈரோட்டிலிருந்து ரயில்கள் மூலம் குடிநீர் கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
வெள்ளிக்கிழமை முதல் நெய்வேலியிலிருந்து தினசரி 500 லாரிகள் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டுவிநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது ரயில் மூலம் குடிநீர் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.
ஈரோட்டிலுள்ள காவிரி ஆற்றுப் பாலம் அருகே குடிநீர் பம்ப் செய்யப்பட்டு லாரிகள் மூலம் எடுக்கப்படுகிறது.பின்னர் இந்த குடிநீர் ஈரோடு லோகோ ஷெட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு சிறப்பு ரயில்களில் உள்ளவேகன்களில் குடிநீர் நிரப்பப்படுகிறது.
பின்னர் இந்த சிறப்பு ரயில்கள் சென்னை வில்லிவாக்கத்திற்கு வந்து சேரும். அங்கிருந்து குழாய்கள் மூலம்கீழ்ப்பாக்கம் குடிநீர் மேல்நிலைத் தொட்டிக்கு நீர் ஏற்றப்பட்டு, பின்னர் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம்செய்யப்படும்.
கடந்த முறை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது இந்த முறையில்தான் குடிநீர் விநியோகம்செய்யப்பட்டது. குடிநீர் விநியோக வசதிக்காக பல குழாய்கள் மற்றும் பிற வசதிகளை ஜெயலலிதா உத்தரவின்பேரில் அதிகாரிகள் செய்திருந்தனர். ஆனால் அதற்குப் பின் வந்த கருணாநிதி அரசு அதை சரியாகபராமரிக்காமல் விட்டு விட்டது. இதனால் பழுதடைந்துள்ள அந்தக் குழாய்களை சரி செய்யும் பணி தற்போதுதீவிரமாக நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications