For Daily Alerts
Just In
செயற்கை கோள் மூலம் வீரப்பனை பிடிக்க முடியாது: விஞ்ஞானி தகவல்
ஈரோடு:
செயற்கை கோள் மூலம் வீரப்பனைக் கண்டு பிடிப்பது அரிதான விஷயம், அதற்கான வாய்ப்பு இல்லை எனவிஞ்ஞானி ஜெயராம் தெரிவித்துள்ளார்.
வீரப்பன் வசிக்கும் காட்டைப் பார்வையிட வந்திருந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி ஜெயராம்கூறியதாவது:
மிகவும் அடர்ந்த காட்டுக்குள் சிறு புள்ளியாகத் தெரியும் மனித உருவங்களைத் தெளிவாகக் கண்டு பிடிப்பதுஅரிதான விஷயம். சராசரியாக 6 அடி உயரம் கொண்ட ஒருவர், படுத்திருந்தால் கூட கண்டுபிடிக்க முடியாது.
செயற்கைக் கோள் மூலம் 20 சதுர அடி நிலப்பரப்பே புள்ளியாகத் தெரியும். இந்த நிலையில், ஒரு அடி கூடஇல்லாத மனிதனின் தலையை அடையாளம் காண்பது அரிதான விஷயம். அந்த அளவிற்கு இன்னும்தொழில்நுட்பம் வளரவில்லை.
ஹெலிகாப்டர் மூலம் தேடினாலும் கூட மனித உருவங்களைக் காண இயலாது எனவே, செயற்கைக் கோள் மூலம்பார்ப்பது அரிது என அவர் ஜெயராம் தெரிவித்தார்.
Comments
Story first published: Saturday, June 16, 2001, 5:30 [IST]