பொள்ளாச்சியில் பணம், லாட்டரி டிக்கெட் கொள்ளை
கோவை:
பொள்ளாச்சியில் ரூ. 5.30 லட்சம் மதிப்புள்ள லாட்டரி டிக்கெட் மற்றும் ரொக்கத்தை திருடிச் சென்றவரைப்போலீசார் தேடி வருகின்றனர்.
பொள்ளாச்சியில் ராஜாமில் ரோட்டில் லாட்டரி டிக்கெட் கடை வைத்திருப்பவர் சத்தியமூர்த்தி (30). இவரதுகடையில் சாலமன் என்பவர் வேலைபார்த்து வந்தார். சாலமன் கடையில் இருக்கும் போது சுரேஷ்குமார் (28)என்பவர் அடிக்கடி கடைக்கு வந்து நண்பரானார்.
சுரேஷ்குமார் மீது சாலமனுக்கு நம்பிக்கை ஏற்பட்டது. இதையடுத்து சில சமயங்களில் சாலமன், சுரேஷ்குமாரிடம்கடையைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு, வெளியே சென்று வருவார். இதேபோன்று கடந்த இருநாட்களுக்கு முன்பு சுரேஷ்குமார் கடைக்கு வந்துள்ளார்.
அப்போது சாலமன் வெளியே கிளம்பிக் கொண்டிருந்தார். சுரேஷ்குமார் தனக்கு உடல் நலம் சரியில்லை எனக்கூறியுள்ளார். இதை நம்பிய சாலமன் வழக்கம் போல, கடையைப் பார்த்துக் கொள்ளும்படி தெரிவித்து விட்டுவெளியில் சென்று விட்டார்.
இந்த சந்தர்ப்பத்தில், கடையில் இருந்த ரொக்கப்பணம் ரூ.2.30 லட்சம் மற்றும் ரூ.3 லட்சம் மதிப்புள்ள லாட்டரிடிக்கெட்டுகள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு சுரேஷ்குமார் ஓடிவிட்டார். வெளியில் சென்று விட்டு திரும்பி வந்தசாலமன், இதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து, அவர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.












Click it and Unblock the Notifications