For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜூலை 14 ல் வாஜ்பாய்-முஷாரப் சந்திப்பு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

இந்தியா வரும் பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் முஷாரப் வரும் ஜூலை 14 ம் தேதி இந்திய பிரதமர் வாஜ்பாயைசந்தித்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முஷாரப் ஜூலை 14 ம் தேதி முதல் ஜூலை 16 ம் தேதி வரை வாஜ்பாய்மற்றும் பிற அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்.

கோவாவில் உள்ள பயணியர் விடுதி அல்லது முசெளரியில் உள்ள பயணியர் விடுதியில் இருவரும் சந்தித்துப்பேசலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் அங்கு தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இருப்பினும், முஷாரப்பும், வாஜ்பாயும் எப்போது சந்தித்துப் பேசுவார்கள் என்பது குறித்து தெளிவான தகவல்கள்எதுவும் இல்லை.

முன்னதாக, காஷ்மீர் பிரச்சனை உள்பட இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையேயுள்ள பிரச்சனைகளைத்தீர்ப்பதற்காக இந்தியா வரும்படி, கடந்த மாதம் வாஜ்பாய், முஷாரப்புக்கு அழைப்பு விடுத்தார் என்பதுநினைவிருக்கலாம்.

மும்பையில் அறுவை சிகிச்சை பெற்று வரும் பிரதமர் வாஜ்பாய், விரைவில் இருவரும் சந்தித்துப் பேசும் நாள்குறித்து தெரிவிப்பார் என்று தெரிகிறது.

முஷாரப்பின் இந்திய வருகை குறித்து கடந்த வெள்ளிக்கிழமை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த்சிங், பிரதமர் வாஜ்பாய் மற்றும் உள்துறை அமைச்சர் அத்வானியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் முஷாரப், ஜனாதிபதி மாளிகையில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்குவாரா?அல்லது ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்குவாரா என்பது குறித்து தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

அமெரிக்க முன்னாள் அதிபர் கிளின்டன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர் இந்தியா வந்திருந்த போதுஅவர்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X