அப்பா அடிப்பாரே .. 10 வயது சிறுமியின் பரிதாப முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தங்கையை கீழே போட்டு அவள் காயமடைந்ததால், அப்பா அடிப்பாரே என்ற பயத்தில் 10 வயது சிறுமிதற்கொலை செய்து கொண்டாள்.

சென்னை அருகே இந்த பரிதாபச் சம்பவம் நடந்துள்ளது. சென்னை அருகேயுள்ள போரூர் பகுதியைச் சேர்ந்தவர்சேகர். இவர் அப்பகுதியில் கொத்தனாராக இருந்து வருகிறார். இவருக்கு மொத்தம் 4 பிள்ளைகள். இவர்களில்மூத்த பெண் கவுதமி (10), கடைசிக் குழந்தையும் பெண்தான். அவளுக்கு ஒன்றரை வயதாகிறது.

சம்பவ தினத்தன்று கவுதமி, தனது தங்கையை தூக்கி வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது கீழேஇருந்த தங்கையை தூக்கிக் கொண்டு எழுந்தபோது கால் இடறி கீழே விழுந்தாள். இதில் கவுதமியின் தங்கையின்பல் உடைந்தது.

இருவரும் கீழே விழுந்த சப்தம் கேட்ட சேகரும், அவரது மனைவியும் ஓடி வந்தனர். சிறுமியின் பல் உடைந்ததைப்பார்த்த சேகர் கோபத்துடன் கவுதமியைக் கண்டித்துள்ளார். அடிக்கவும் கையை ஓங்கியுள்ளார். இதைப் பார்த்துப்பயந்த கவுதமி வீட்டிலிருந்து வெளியே ஓடி பக்கத்து வீடான தனது பாட்டி வீட்டுக்குப் போய் விட்டாள்.

இரவில் வீடு திரும்பினால் தந்தை அடிப்பாரே என்ற பயம் கவுதமிக்குள் எழுந்தது. அப்பாவின் அடியிலிருந்துதப்பிக்க தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற பரிதாபமான முடிவுக்கு வந்தாள் கவுதமி. இரவில் பாட்டிஉறங்கியதும் வீட்டிலிருந்த மண்ணெண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டாள். தீயில் கருகியஅவளது அவலக் குரல் கேட்டு பக்கத்து வீட்டிலிருந்தவர்கள் ஓடிவந்தனர்.

70 சதவீதத்திற்கும் மேலாக உடல் கருகிய நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கவுதமி கொண்டுசெல்லப்பட்டாள். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தாள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+