கேர்மளம் காட்டுப்பகுதியில் அதிரடிப்படை

Subscribe to Oneindia Tamil

சத்தியமங்கலம்:

வீரப்பனுக்கு கேர்மளம் பகுதியிலிருந்து உணவுப்பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது என்று உளவுப் பிரிவுபோலீசார் கண்டறிந்துள்ளனர்.

இதனால், வீரப்பன் கேர்மளம் காட்டுப்பகுதியில் இருக்கலாம் என கருதி, அந்தப் பகுதிக்கு அதிரடிப்படையினர்விரைந்துள்ளனர்.

போலீசாருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வரும் வீரப்பனைப் பிடிக்க தேவாரம் வரும் 21ம் தேதி காட்டுக்குள்செல்வதாக இருந்தது. ஆனால், இப்போது வீரப்பனுக்கு உணவு செல்லும் வழி குறித்த "க்ளு கிடைத்துள்ளதால்,அதிரடிப்படையினர் காட்டுப் பகுதிக்கு விரைந்துள்ளனர்.

வீரப்பனுக்கு கேர்மளம் என்ற இடத்தில் உள்ள ஒரு மளிகைக் கடையிலிருந்து உணவுப் பொருட்களை காட்டுவாசிகள் மூலம் பெறுகிறான் என தெரிய வந்துள்ளது.

எனவே, இந்த மளிகைக் கடை வியாபாரியைப் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். வீரப்பன் குறிப்பிட்டஇந்தக் காட்டுப் பகுதியில் தங்கியிருக்கலாம் என கருதிய அதிரடிப்படையினர் முற்றுகையிட்டுள்ளனர்.

கடந்த 3 நாட்களாக ஐ.ஜி.,விஜயகுமார், அதிரடிப்படைக்குத் தகுதியான ஆட்களைத் தேர்வு செய்யும் பணியில்ஈடுபட்டிருந்தார். அந்தப் பணி இப்போது முடிந்துள்ளது.

தேர்வு பெற்றவர்கள் பயிற்சி பெற உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில், உளவுப் பிரிவுபோலீசாருக்குத் கிடைத்த நம்பகமான தகவலையடுத்து கேர்மளம் காட்டுப்பகுதியில் அதிரடிப்படையினர் தேடுதல்வேட்டையைத் துவங்கியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+