அரசியல் கட்சியாகிறது ப.சி.யின் ஜனநாயக பேரவை
கோவை:
தமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை அரசியல் கட்சியாக மாற ஆதரவு அதிகரித்து வருகிறது என அதன்நிறுவனர் பா.சிதம்பரம் தெரிவித்தார்.
கோவையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
சென்னை உட்பட 33 இடங்களில் கருத்தாய்வுக் கூட்டம் நடத்தி வருகிறேன். இதுவரை 13 மாவட்டங்களில்கருத்தாய்வுக் கூட்டம் நடத்தி முடித்துள்ளேன். அடுத்த மாதம் ஜூலை 15ம் தேதிக்குள் பேரவை கருத்தாய்வுக்கூட்டம் நடத்தி முடிக்கப்படும்.
பேரவையை அரசியல் கட்சியாக மாற்ற அதிகஅளவு ஆதரவு கிடைத்து வருகிறது. இந்த கருத்தாய்வுக் கூட்டம்முடிந்தபிறகு அரசியல் கட்சியாக மாற்றுவது பற்றி முடிவு செய்யப்படும்.
தமிழகத்தில் எப்போதும் அலை வீசினால் ஒரே மாதிரியாக இருக்கும் .ஆதரவு அ-லை எனத் தேடும்போது திமுக,அதிமுக இரண்டு கட்சிகளைத்தவிர மாற்றுக் கட்சி எதுவும் இல்லை. எனவே, இதற்கு மாற்றாக 3வது அணியாககாங்கிரஸ் அல்லது தமிழ் மாநில காங்கிரஸ் இருந்தால் மகிழ்ச்சியே.
கல்லூரிகளில் பல்வேறு துறைகளில் உள்ள மாணவர்கள் பேரவைகளில் நான் பேச விரும்புகிறேன். அதற்கானவாய்ப்புகள் எனக்கு கிடைக்கும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
வட்டி தள்ளுபடியைப் பொறுத்தவரை அபராத வட்டியை திமுக அரசு தள்ளுபடி செய்தது. இப்போது வட்டியைஅதிமுக தள்ளுபடி செய்தது. இதேபோல நிலவள வங்கி மற்றும் நெசவாளர்கள் கூட்டுறவு வங்கி ஆகியவற்றிலும்வட்டியைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கஜானா காலியானது என்பது வெரும் கவர்ச்சியான வார்த்தையே. எந்த அரசு பற்றாக்குறையில்லாத பட்ஜெட்சமர்ப்பிக்கிறது?. எல்லாமே பற்றாக்குறையில் ஓடும்போது கஜானாவில் என்ன இருக்க போகிறது?
திருப்பூர் பனியன் தொழில் ஏற்றுமதிக்கு டியூட்டி டிராபேக் ஏன் எனக் குறைத்தார்கள் எனத் தெரியவில்லை. நான்டெல்லி செல்லும்போது நிதியமைச்சரைச் சந்தித்து இது குறித்து எடுத்துச் சொல்வேன் என்றார்.