வெயில் கொடுமை .. ஏட்டு சாவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் போக்குவரத்துக் காவலர் வெயில் கொடுமை தாங்காமல் சுருண்டு விழுந்து இறந்தார்.
ரயில்வே போலீஸில் தலைமைக் காவலராக (ஏட்டு) இருந்தவர் ஜெயராம் கிருஷ்ணன் (வயது 45). இவர்பேசின்பிரிட்ஜ் ரயில்வே குடியிருப்பில் வசித்து வந்தார்.
சென்டிரல் ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை காலை பணியில் ஈடுபட்டிருந்தார். ஆட்டோக்களை ஒழுங்கு படுத்தும்பணியில் அவர் ஈடுபட்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.
வெயில் கொடுமை காரணமாக அவர் இறந்திருக்கலாம் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications