இந்திய வீரர்கள் சுட்டு வங்கதேச விவசாயி சாவு: எல்லையில் பதட்டம்

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தின் கோட் பேஹார் மாவட்டத்தை ஒட்டி அமைந்திருக்கும் இந்திய- வங்கதேச எல்லையில்வங்கதேசத்தை சேர்ந்த விவசாயி இந்திய எல்லை காவல் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து அங்குபதட்டம் நிலவி வருகிறது.

தார்பரஹாத் - குச்லிபாரி மாவட்டங்களிலும், அதையொட்டி அமைந்திருக்கும் சர்வதேச எல்லைக் கோட்டுபகுதியிலும் பதட்டம் நிலவி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்திய எல்லை பாதுகாப்ப்பு படையினர் (பி.எஸ்.எப்) வங்க தேசத்தை சேர்ந்த விவசாயி ஒருவரை திங்கள்கிழமைசுட்டுக் கொன்றனர். இதையடுத்து இந்திய-வங்க தேச எல்லையில் பதட்டம் நிலவி வருகிறது.

இது குறித்து மேற்குவங்க மாநில டி.ஜி.பி. சயான் முகர்ஜி நிருபர்களிடம் கூறுகையில், வங்க தேசத்தை சேர்ந்த சிலர்இந்தியாவிற்குள் ஊடுறுவி இந்திய எல்லைக்குள் இருக்கும் தேயிலை எஸ்டேட் தொழிலாளர்களுக்கு தொல்லைகொடுத்தனர். மேலும் அதை தடுக்க சென்ற பி.எஸ்.எப். வீரர்களையும் தாக்கினர்.

இதையடுத்து பி.எஸ்.எப். வீரர்கள் தற்காப்புக்காக நடத்திய துப்பாக்கி சூட்டில் வங்க தேசத்தை சேர்ந்த விவசாயிஒருவர் கொல்லப்பட்டார். இதனால் செவ்வாய்க்கிழமை இந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டது.

ஆனாலும் உள்ளூர் போலீசார் எடுத்த நடவடிக்கையையடுத்து இந்த பகுதியில் நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது.அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருப்பதற்காக தேயிலை எஸ்டேட்டுக்குள் கூடுதல் படையினர்நிறுத்தப்பட்டுள்ளனர்.

வங்கதேசத்தினர் தாக்கியதில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

கடந்த வியாழக்கிழமை கால்நடைகளை கடத்த முயன்ற வங்கதேசத்தவர்கள் மீது பி.எஸ்.எப். படையினர் துப்பாக்கிசூடு நடத்தியதில், வங்க தேசத்தை சேர்ந்த 2 பேர் கொல்லப்பட்டனர். பி.எஸ்.எப்.வீரர்கள் 2 பேர் காயமடைந்தனர்என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 2 சம்பவங்களும் இந்திய-வங்கதேச அதிகாரிகள் எல்லை பகுதியில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியைதீவிரப்படுத்த வேண்டும் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்திய 1 வார காலத்திற்குள் நடந்துள்ளது.

கடந்த வாரம், இந்தியாவும், வங்க தேசமும் எல்லைப்பகுதியில் பிரச்சனைக்குரியதாக உள்ள 6.1 கிலோமீட்டர் தூரஎல்லைக் கோட்டில், இரு நாட்டினரும் எல்லை தாண்டாமல் இருப்பது குறித்து கண்காணிக்க இரு நாட்டைச் சேர்ந்தகூட்டுக்குழு அமைப்பது குறித்து முடிவு செய்தன என்பது குறிப்பிடத்தக்கது.

சென்ற ஏப்ரல் மாதம் வங்க தேச ரைபிள்ஸ் படையினர் (பி.டி.ஆர்).பி.எஸ்.எப். முகாம் மீது தாக்குதல் நடத்தி,பி.எஸ்.எப். வீரர்களை கடத்திச் சென்று 16 பி.எஸ்.எப். வீரர்களை கொடூரமாக கொடுமைப்படுத்திக்கொன்றதிலிருந்தே இரு நாட்டிற்கும் இருந்து வந்த நல்லுறவில் சிறு விரிசல் ஏற்பட்டுள்ளது என்பதுகுறிப்பிடத்தக்தது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+