தொட்டில் குழந்தைகளுக்குப் பெயர் வைத்தார் ஜெ.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தொட்டில் குழந்தைத் திட்டத்தின் கீழ் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள இரண்டு குழந்தைகளுக்கு முதல்வர் ஜெயலலிதாபெயர் சூட்டி ஆசிர்வாதம் வழங்கினார்.

முதல்வர் ஜெயலலிதாவின் முந்தைய திட்டமான தொட்டில் குழந்தைத் திட்டம், கடந்த திமுக ஆட்சிக்காலத்தில்கிடப்பில் போடப்பட்டது. தற்போது மீண்டும் முதல்வராகியுள்ள ஜெயலலிதா மீண்டும் தொட்டில் குழந்தைத்திட்டத்தைக் கொண்டு வந்துள்ளார்.

அவர் மீண்டும் வந்த பிறகு தொட்டில் குழந்தைகள் திட்டத்தின் கீழ், இரண்டு குழந்தைகள் அரசு வசம்ஒப்படைக்கப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஒரு குழந்தையும், சேலத்தில் ஒரு குழந்தையும்தொட்டில் குழந்தைத் திட்டத்தின் கீழ் சேர்ந்துள்ளன.

இந்த இரண்டு குழந்தைகளும் சென்னை தலைமைச் செயலகத்திற்கு திங்கள்கிழமை கொண்டு வரப்பட்டன. இந்தக்குழந்தைகளை வாங்கி முத்தமிட்டு ஆசிர்வதித்த ஜெயலலிதா, இருவருக்கும் சந்திரா, சித்ரா என பெயரிட்டார்.அக்குழந்தைகளுக்கு புத்தாடைகளையும் அவர் அணிவித்தார்.

இவை தவிர, ஏற்கனவே தொட்டில் குழந்தைத் திட்டம் மூலம் சேர்க்கப்பட்டு தற்போது படித்துக் கொண்டிருக்கம் 12குழந்தைகளும் ஜெயலலிதாவைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+