இலங்கை அதிபர்-சகோதரர் அரசியல் மோதல் முற்றுகிறது
கொழும்பு:
இலங்கையில் அதிபர் சந்திரிகா அரசுக்கு எதிராக இந்த வார இறுதியில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரஎதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி திட்டமிட்டுள்ளது.
நாடாளுமன்ற சபாநாயகரும், அதிபர் சந்திரிகாவின் சகோதரருமான அனுரா பண்டாரநாயகா எதிர்க்கட்சியானஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்.
அவரும், சந்திரிகாவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரும் முயற்சியில் முழுமூச்சாகஈடுபட்டுள்ளதால் இலங்கையில் சந்திரிகாவுக்கும், அவரது சகோதரருக்கும் இடையே அரசியல் மோதல் வலுக்கிறதுஎன்றே கூறலாம்.
இன்னொரு புறம், இலங்கையில் சந்திரிகா குமாரதுங்கா தலைமையிலான மக்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும்இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சியினர் அதிபருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தங்களது ஆதரவைவிலக்கிக் கொள்ளவும் தயாராக உள்ளனர்.
இலங்கை தலைமை நீதிபதி சரத் சில்வா மீது பல குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. அவர் மீதான குற்றச்சாட்டுக்கள்குறித்து ஆளும் கட்சி எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அனுராபண்டாரநாயக்கா கோரி வருகிறார்.
கடந்த 6 ம் தேதி அவரது ஐக்கிய தேசிய கட்சி இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி, நாடளுமன்றத்தில் கேள்விஎழுப்பியது. தலைமை நீதிபதி மேல் கூறப்பட்டுள்ள புகார் குறித்து கமிட்டி ஒன்றை அமைத்து விசாரணை நடத்தவேண்டும் என்றும் அவரது கட்சி கோரியது.
ஆனால், அதே நாளில் தலைமை நீதிபதி மேல் எழுப்பப்பட்டுள்ள பல குற்றச்சாட்டுக்கள் குறித்துவிசாரணைக்கமிட்டி அமைக்கக் கூடாது என நாடாளுமன்ற சபாநாயகருக்கு (அனுரா பண்டாரநாயக்காவுக்கு) 3பேர் கொண்ட சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, ஐக்கிய தேசியக் கட்சி செய்தித்தொடர்பாளர் கூறுகையில், மக்களின் பல பிரச்சனைகளைத் தீர்வுசெய்ய மக்கள் கூட்டணி தவறிவிட்டது என்றும், அதற்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம்கொண்டு வரவுள்ளோம் என்றார்.