வீரர்களுக்கு பஞ்சம்: அதிக குழந்தைகளைப் பெறச் சொல்கிறது இலங்கை
கொழும்பு:
இலங்கையில் புத்தபிட்சுக்களுக்கும், ராணுவ வீரர்களுக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால், அதிக குழந்தைகளைப்பெற்றுக் கொள்ளுங்கள் என்று இலங்கை பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமநாயகே பொதுமக்களுக்கு வேண்டுகோள்விடுத்துள்ளார்.
இதுகுறித்து இலங்கையில் வெளியாகும் பத்திரிக்க்ைகு விக்ரமநாயகே அளித்த பேட்டி:
இலங்கையில் புத்த பிட்சுக்களுக்கும், ராணுவ வீரர்களுக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இவர்களின்எண்ணிக்கை சரிந்து வருகிறது.
இந்த நிலை மாற வேண்டும். பொதுமக்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அதிககுழந்தைகளைப் பெற்றுக் கொள்பவர்களுக்கு போனஸ் மற்றும் பிற சலுகைகள் வழங்கப்படும்.
அதாவது சிறுகுடும்பமே சீரான வாழ்வு என்ற பழமொழிக்கெல்லாம் இலங்கை மக்கள் குட்பை சொல்லி விடவேண்டும்.
இலங்கை ராணுவ ஓட்டுநர் நியமனத்துக்கு ஆள் சேர்க்கையின்போது, 10, 000 ராணுவ வீரர்களை மட்டுமேசேர்த்துள்ளோம். அதாவது ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பதில் மக்கள்தொகை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மக்கள்தொகை மிக மிகக் குறைவாக இருப்பதே இதற்குக் காரணமாகும் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னதாக, இலங்கையில் மக்கள் தொகை 19.3 மில்லியனாக உள்ளது. 1999 ம் ஆண்டு மக்கள்தொகை 1.4சதவீதமே உயர்ந்தது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
புலிகளின் தாக்குதலைச் சமாளிக்கும் வகையில், ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் அமைப்பில் விக்ரமநாயகே பலவருடங்களாக உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications