தண்ணீர் லாரி மோதி 3 மாணவர்கள் சாவு
சென்னை:
சென்னையில் தண்ணீர் லாரி மோதியதில் 3 மாணவர்கள் நசுங்கி இறந்தனர்.
சென்னையில் தண்ணீர் லாரிகள் மோதி விபத்து ஏற்படுவது அதிகரித்து வருகிறது. இதில் பலியானவர்கள்பெரும்பாலும் பெண்களும், குழந்தைகளுமே. இந்நிலையில் திங்கள்கிழமை நடந்த ஒரு விபத்தில் ஒரே சைக்கிளில்சென்ற 3 மாணவர்கள் தண்ணீர் லாரி மோதி பரிதாபமாக இறந்தனர்.
சூளைமேடு பத்மநாபன் தெருவைச் சேர்ந்தவர்கள் பவானி குமார், கார்த்தி, பரமேஸ்வரன். மூவருக்கும் 12வயதாகிறது. இவர்கள் 3 பேருக்கும் 7ம் வகுப்பில் சேர வேறு பள்ளியில் இடம் கிடைத்துள்ளது. இதையடுத்து,நண்பர்களைப் பார்த்து விட்டு ஒரே சைக்கிளில் 3 பேரும் வந்து கொண்டிருந்தனர்.
சூளைமேடு அருகேயுள்ள கங்கை அம்மன் கோவில் சந்திப்பில் அவர்கள் வந்தபோது எதிரே வந்த தண்ணீர் ஏற்றிவந்த லாரி சைக்கிள் மீது மோதியது. இதில் லாரி சக்கரத்தில் சிக்கி 3 மாணவர்களும் பரிதாபமாக இறந்தனர்.
சைக்களில் மோதிய வேகத்தில் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் அப்பகுதியில் இருந்தபொதுமக்கள் லாரி டிரைவரை விரட்டிப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
3 மாணவர்கள் பரிதாபமாக தண்ணீர் லாரிக்குப் பலியானதால், சூளைமேடு பகுதியில் பரபரப்பு நிலவியது. தண்ணீர்லாரிகளின் வேகத்தைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே இதுபோன்ற விபத்துக்களைத் தவிர்க்க முடியும் என்றுபொதுமக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications