தண்ணீர் லாரி மோதி 3 மாணவர்கள் சாவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் தண்ணீர் லாரி மோதியதில் 3 மாணவர்கள் நசுங்கி இறந்தனர்.

சென்னையில் தண்ணீர் லாரிகள் மோதி விபத்து ஏற்படுவது அதிகரித்து வருகிறது. இதில் பலியானவர்கள்பெரும்பாலும் பெண்களும், குழந்தைகளுமே. இந்நிலையில் திங்கள்கிழமை நடந்த ஒரு விபத்தில் ஒரே சைக்கிளில்சென்ற 3 மாணவர்கள் தண்ணீர் லாரி மோதி பரிதாபமாக இறந்தனர்.

சூளைமேடு பத்மநாபன் தெருவைச் சேர்ந்தவர்கள் பவானி குமார், கார்த்தி, பரமேஸ்வரன். மூவருக்கும் 12வயதாகிறது. இவர்கள் 3 பேருக்கும் 7ம் வகுப்பில் சேர வேறு பள்ளியில் இடம் கிடைத்துள்ளது. இதையடுத்து,நண்பர்களைப் பார்த்து விட்டு ஒரே சைக்கிளில் 3 பேரும் வந்து கொண்டிருந்தனர்.

சூளைமேடு அருகேயுள்ள கங்கை அம்மன் கோவில் சந்திப்பில் அவர்கள் வந்தபோது எதிரே வந்த தண்ணீர் ஏற்றிவந்த லாரி சைக்கிள் மீது மோதியது. இதில் லாரி சக்கரத்தில் சிக்கி 3 மாணவர்களும் பரிதாபமாக இறந்தனர்.

சைக்களில் மோதிய வேகத்தில் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் அப்பகுதியில் இருந்தபொதுமக்கள் லாரி டிரைவரை விரட்டிப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

3 மாணவர்கள் பரிதாபமாக தண்ணீர் லாரிக்குப் பலியானதால், சூளைமேடு பகுதியில் பரபரப்பு நிலவியது. தண்ணீர்லாரிகளின் வேகத்தைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே இதுபோன்ற விபத்துக்களைத் தவிர்க்க முடியும் என்றுபொதுமக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+