நடத்தையில் சந்தேகம் .. கள்ளக் காதலி படுகொலை
சென்னை:
சென்னை கோடம்பாக்கம் பகுதியில் கள்ளக்காதலில் ஏற்பட்ட மோதலில் ஒரு பெண் குத்திக் கொலைசெய்யப்பட்டார்.
கோடம்பாக்கம் டிரஸ்ட் புரம் பகுதியில் வசித்து வந்தவர் ரெஜீனா (40). கணவரை இழந்த ரெஜீனா அப்பகுதியைச்சேர்ந்த ஆட்டோ டிரைவர் செல்வகுமார் என்பவருடன் பழகி வந்தார். ரெஜீனாவுக்கு ஒரு மகனும், மகளும்உள்ளனர்.
பிரச்சினையின்றி போய்க் கொண்டிருந்த இந்தக் கள்ளக் காதல் நாளடைவில் கசக்கத் தொடங்கியது. சமீபத்தில்ரெஜீனாவும், செல்வகுமாரும் பேசிக் கொள்ளாமல் இருந்தனர்.
இந்த நிலையில் ரெஜீனாவின் நடத்தை மேல் செல்வகுமாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தன்னை ஏமாற்றி விட்டாரேஎன்ற ஆத்திரம் அவருக்கு வந்தது. இதையடுத்து அவரைக் கொலை செய்ய திட்டமிட்டார்.
புலியூர் மெயின் ரோட்டில் திங்கள்கிழமை ரெஜீனா நடந்து போய்க் கொண்டிருந்தபோது ஆட்டோவில் வந்தசெல்வகுமார் மறைத்து வைத்திருந்த
கத்தியால் ரெஜீனாவை குத்திக் கொலை செய்தார். ரெஜீனா அங்கேயே இறந்தார்.
கோடம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான செல்வகுமாரைத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications