மதுரையில் விடுதலை சிறுத்தைகள் பொருளாளர் கொலை
மதுரை:
மதுரையில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் மாநிலப் பொருளாளார் பாண்டி கொலை செய்யப்பட்டார். இதுசம்பந்தமாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து, போலீஸார் கூறியதாவது:
மதுரை ஆனையூர் டவுண் பஞ்சாயத்து முடக்கத்தானைச் சேர்ந்தவர் பாண்டி (35). அதே பகுதியைச் சேர்ந்த காமராஜ்(25) மற்றும் சாராய வியாபாரி மணிகண்டன் (23) ஆகியோர் மீது பல வழக்குகள் உள்ளன. இவர்களுடையசெயலை அடிக்கடி பாண்டி கண்டித்து வந்தார்.
இந்நிலையில், தாமரைக் கண்மாய் அருகே பாண்டி நடந்து சென்று கொண்டிருந்த போது, 5 பேர் கொண்ட கும்பல்ஒன்று அவரை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பித்து ஓடிவிட்டது. இச்சம்பவத்தில் பாண்டி அந்த இடத்திலேயேஇறந்தார்.
இது தொடர்பாக, காமராஜைக் கைது செய்தனர் கூடல் புதூர் போலீஸார். மேலும், மணிகண்டன், சோமசுந்தரம்(23), வெள்ளையன் (24), சஞ்சீவி (23) ஆகிய 4 பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications