For Daily Alerts
Just In
வாழப்பாடி தொடர்ந்த வழக்கு ... மூப்பனாருக்கு நோட்டீஸ்
சென்னை:
காங்கிரஸ் அறக்கட்டளைக்கு புதிய நிர்வாகிகள் நியமிப்பது தொடர்பாக, தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர்வாழப்பாடி ராமமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்மூப்பனாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
காங்கிரஸ் அறக்கட்டளையில் நீண்ட காலமாக முறையாக நிர்வாகிகள் நியமிக்கப்படாததால், அறக்கட்டளையின்செயல்பாடுகள் சரிவர இல்லை.
எனவே மூப்பனாரின் தலைமையிலிருந்து அறக்கட்டளையை மீட்டு புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்யஉயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரி வாழப்பாடி ராமமூர்த்தி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்செய்திருந்தார்.
மனுவை ஏற்ற நீதிபதி ஏ.கே. ராஜன், தற்போது அறக்கட்டளை உறுப்பினர்களாக உள்ள மூப்பனார், ராமசாமிஉடையார் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார்.
Story first published: Tuesday, June 19, 2001, 5:30 [IST]