For Daily Alerts
Just In
சேலத்தில் திமுக பிரமுகர் படுகொலை
சேலம்:
சேலத்தில் திமுக பிரமுகர் ஓட ஓட விரட்டி, வெடிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
சேலம் செவ்வாய்பேட்டையைச் சேர்ந்தவர் கணேசன் (37), திமுக பிரமுகர். கட்சியில் அதிக ஈடுபாடு கொண்டதீவிரத் தொண்டராக இருந்தார். இந்த நிலையில், திங்கள்கிழமை அவர் மோட்டார் சைக்களில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது வேறு ஒரு மோட்டார் பைக்கில் வந்த இருவர் அரிவாளால் வெட்டியுள்ளனர். அப்போது மோட்டார்சைக்கிளைக் கிழே போட்டு விட்டு கணேசன் ஓடத் தொடங்கினார். ஆனால், அவரைத் துரத்தி வந்தவர்களும்மோட்டார் சைக்கிளை விட்டு கீழே இறங்கி அவரை ஓட ஓட விரட்டி கத்தி அரிவாளால் தாக்கிக் கொலை செய்தனர்.
இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.
Story first published: Tuesday, June 19, 2001, 5:30 [IST]