அதிமுக கூட்டணியிலிருந்து விலகலா? ராமதாஸ் விளக்கம்
சென்னை:
ஜெயலலிதா முதல்வராக பதவியேற்ற பிறகு அவரைச் சந்திக்காமல் இருந்து வந்த பாட்டாளி மக்கள் கட்சிநிறுவனர் டாக்டர் ராமதாஸ் முதல் முறையாக திங்கள்கிழமை ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசினார்.
சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து 20 இடங்களில் ஜெயித்த பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர்ராமதாஸ், அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதன் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைச் சந்திக்காமல் இருந்துவந்தார்.
ஜெயலலிதாவுக்கும், ராமதாஸுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் கசிந்தன. தேசியஜனநாயக முன்னணியில் சேர ராமதாஸ் முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் திங்கள்கிழமை திடீரென தலைமைச் செயலகத்திற்கு வந்த ராமதாஸ் முதல்வர் ஜெயலலிதாவைச்சந்தித்தார்.
பின்னர் வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், முதல்வரை சந்தித்ததில் எந்த விசேஷம்இல்லை. விவசாயிகளுக்கான கடன் தொகைக்கான வட்டியை ரத்து செய்ததை பாராட்டினேன்.
முதல்வர் கலந்து கொண்ட மூப்பனார் அளித்த விருந்தில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. அதற்கானகாரணத்தை மூப்பனாருக்கு ஏற்கனவே தெரிவித்து விட்டேன்.
மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நாங்கள் சேர மாட்டோம். அதுதொடர்பான செய்திகளில்உண்மையில்லை என்றார் அவர்.