நகை பிரச்சனையில் கணவன்-மனைவி தற்கொலை
கோவை:
அடகு வைக்கப்பட்ட நகையை திருப்புவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் மனைவி தீக்குளித்து தற்கொலைசெய்து கொண்டார். கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கோவை அருகே உள்ள போத்தனூரில் ரயில்வே காலனி உள்ளது. இங்குள்ள ரயில் ஒர்க்ஷாப்பில் வேலை செய்துவருபவர் ஜெயக்குமார் (29). இவரது மனைவி தனலட்சுமி (24). இவர்கள் ரயில்வே காலனியில் வசித்து வந்தனர்.இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு வருவதுண்டு.
இந்நிலையில் அடகு வைக்கப்பட்ட நகையைத் திருப்பித் தரக் கோரி தனலட்சுமி வலியுறுத்தி வந்துள்ளார்.இதனால், கணவருடன் ஏற்பட்ட சண்டையையடுத்து, தன் மீது மண்ணெண்யை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்தனலட்சுமி. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.
சம்பவத்தைக் கேள்விப் பட்ட ஜெயக்குமார், வீட்டுக்கு ஓடிவந்தார். மனைவியைப் பிரிந்த துக்கத்தில் ஆழ்ந்தார்.மனைவியே போன பிறகு வேறு வாழப் பிடிக்காத ஜெயக்குமார், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.