21 ம் தேதி முதல் சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர்
சென்னை:
நெய்வேலியிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ள குடிநீரை விநியோகிக்கும் பணி சென்னை நகரில்செவ்வாய்க்கிழமை துவங்கியது.
சென்னைக் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காக நெய்வேலியிலிருந்து தினசரி 500 லாரிகள் மூலம்,ஈரோட்டிலிருந்து ரயில் மூலம் குடிநீர் கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
முதல் கட்டமாக நெய்வேலியிலிருந்து தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெய்வேலியிலிருந்து78 லாரிகளில் குடிநீர் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தத் தண்ணீர் கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்புநிலையத்தில் சுத்தம் செய்யப்பட்டு தற்போது சென்னை நகரில் விநியோகத்திற்கு தயார் நிலையில்வைக்கப்பட்டுள்ளது.
இன்னும் 2 நாட்களில் 500 குடிநீர் லாரிகள் வரை நெய்வேலியிலிருந்து வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதற்கு அடுத்த கட்டமாக ஈரோட்டிலிருந்து 21ம் தேதி லாரி மூலம் குடிநீர் வரவுள்ளது. சென்னை வில்லிவாக்கம்ரயில் நிலையத்திற்கு வந்து சேரும் இந்த ரயில் குடிநீர் பின்னர் லாரிகள் மூலம் சென்னை மக்களுக்கு விநியோகம்செய்யப்படும்.
இந்த குடிநீர் விநியோகம் அக்டோபர் மாதம் வரை நீடிக்கும் என்று மாநில உள்ளாட்சித்துறை அமைச்சர் துரைராஜுகூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications