கி.வீரமணியை விசாரிக்க கோர்ட் உத்தரவு
சென்னை:
திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணியிடம் விசாரணை நடத்தி அது தொடர்பான அறிக்கையை ஜூலை19ம் தேதிக்குள் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை கோர்ட் சி.பி.சி.ஐ.டி. போலீஸாருக்குஉத்தரவிட்டுள்ளது.
தமிழக ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியசுவாமிக்கும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான தடா கைதிரவி என்பவருக்கும் தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் இருவரும் சேர்ந்திருந்த போட்டோவும் பத்திரிகைகளில்வெளியானது. இவற்றை வீரமணி வெளியிட்டிருந்தார். ஆனால் இந்த போட்டோ போலியானது என்று பின்னர்தெரிய வந்தது.
இதையடுத்து வீரமணி மீது சுப்பிரமணியசுவாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கைஏற்ற உயர்நீதிமன்றம் வீரமணியை விசாரிக்க போலீஸுக்கு உத்தரவிட்டது.
ஆனால் கோர்ட் உத்தரவுப்படி வீரமணி மீது வழக்குத் தொடரப்படவில்லை. இந்த நிலையில் 18ம் தேதி மாலைக்குள்வீரமணி மீது வழக்குத் தொடராவிட்டால் முதல்வர் ஜெயலலிதா மீது வழக்குத் தொடருவேன் என்று சுவாமிஎச்சரிக்கை விடுத்திருந்தார். அவரது கெடுப்படி எதுவும் நடக்காததால், செவ்வாய்க்கிழமை சென்னை ஜார்ஜ் டவுன்மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜராகி மனு கொடுத்தார்.
தனது மனுவில், தடா கைதி ரவி என்பரை சென்னை கோர்ட்டில் தி.கவினர் ஆஜர்படுத்தி அவருக்கும் எனக்கும்தொடர்பு இருப்பதாகவும், ரவி என் வீட்டிற்கு வந்தபோது எடுத்த போட்டோ என்று கூறி ஒரு போட்டோவையும்தாக்கல் செய்தனர். இதையடுத்து தடயவியல் துறையினர் போட்டோவைப் பரிசோதித்தபோது அது போலியானதுஎன்று தெரிய வந்தது.
இதையடுத்து தஞ்சாவூர் கோர்ட்டில் புகார் செய்து வீரமணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரினேன். ஆனால் எந்தநடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஜெயலலிதாவும், வீரமணியும் நெருங்கிய நண்பர்கள். என்னைப் பழி வாங்க வேண்டும் என்பதற்காக இருவரும்சேர்ந்து நடத்திய நாடகமே இது. எனவே இந்த விவகாரம் குறித்து வீரமணி, ஜெயலலிதா ஆகியோருடன்விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்து கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று போலீஸாருக்கு கோர்ட்உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
மனுவை ஏற்ற மாஜிஸ்திரேட் அலமேலு நடராஜன், புகார்தாரரின் மனு குறித்து தடா கைதி ரவி மற்றும் வீரமணிஆகியோரிடம் விசாரணை நடத்தி அடுத்த மாதம் 16ம் தேதிக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications