டெல்லி திரும்பினார் வாஜ்பாய்
மும்பை:
மும்பை ப்ரீச் கேன்டி மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிரதமர் வாஜ்பாய்,செவ்வாய்க்கிழமை பிற்பகல் டெல்லி திரும்பினார்.
அவரை மராட்டிய கவர்னர் அலெக்சாண்டர், முதலமைச்சர் விலாஸராவ் தேஷ்முக் மற்றும் உயர் அதிகாரிகள்உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர். பிற்பகல் 2.50 மணிக்குப் மும்பையிலிருந்து புறப்பட்டு டெல்லி வந்துசேர்ந்தார் பிரதமர்.
டெல்லி விமான நிலையத்தில் துணை ஜனாதிபதி கிருஷ்ணகாந்த், உள்துறை அமைச்சர் அத்வானி, டெல்லி கவர்னர்விஜய்கபூர் மற்றும் பலர் பிரதமர் வாஜ்பாயை வரவேற்றனர்.
முன்னதாக, கடந்த ஜூன் 6 ம் தேதி மூட்டு வலி காரணமாக மும்பை ப்ரீச் கேன்டி மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார் வாஜ்பாய். அவருக்கு ஜூன் 7 ம் தேதி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அறுவைசிகிச்சையை நியுயார்க் டாக்டர் சித்ரஞ்சன் ரனவத்தே தலைமையிலான டாக்டர்கள் குழு செய்தது. அறுவைசிகிச்சைக்குப்பிறகு பிரதமர் வாஜ்பாய் 12 நாட்கள் அதே மருத்துவமனையில் ஓய்வெடுத்தார். அவருக்குத்தொடர்ந்து 6 மாதங்கள் பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.
தற்போது வலது காலில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட பிரதமர் வாஜ்பாய் கடந்த வருடம்அக்டோபர் மாதம் இடது காலில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications