For Daily Alerts
Just In
சிறுத்தை கடித்து 7 வயது சிறுவன் சாவு
கோவை:
விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை சிறுத்தைப் புலி உயிருடன் கடித்து தின்றது.
வால்பாறை பிளாண்டி எஸ்டேட் வேலிப் பகுதியில் வசித்து வருபவர் அழகர். இவரது மகன் சத்தியராஜ் (7). இவன்புதன்கிழமை மாலை பள்ளி முடிந்து, வீட்டுக்கு வந்து கொண்டிருந்தான். அப்போது சிறுத்தைப் புலி ஒன்று,திடீரென்று அவன் எதிரே வந்து, அவனைத் தாக்கி, கடித்து இழுத்துச் சென்றது.
சிறுவன் அலறல் சத்தம் கேட்டபோதிலும், இரவு நேரம் என்பதால் சிறுவன் எந்த இடத்தில் இருந்தான் என்பதுதெரியவில்லை. இரவு முழுவதும் தேடியும் யாரும் சிறுவனைக் கண்டு பிடிக்க முடியவில்லை.
வியாழக்கிழமை காலை மீண்டும் சிறுவனைத் தேடிய பெற்றோர்கள், அவனது தலைமட்டும் கிடந்ததைக் கண்டுஅதிர்ந்தனர். உடலை சிறுத்தைப் புலி தின்று விட்டுச் சென்றது.
இச்சம்பவம் வால்பாறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments
Story first published: Thursday, June 21, 2001, 5:30 [IST]