இந்தியா-பாகிஸ்தானுக்கிடையே மேலும்2 பஸ்கள்
டெல்லி:
டெல்லியிலிருந்து லாகூருக்கு மேலும் 2 பஸ்கள் இயக்கப்படும் என்று டெல்லி போக்குவரத்துக்கழக நிர்வாகஇயக்குநர் ராகேஷ் மேத்தா தெரிவித்தார்.
ஆகஸ்டுக்குள் இந்த 2 பஸ்களும் தயாராகிவிடுமாம். ஏற்கனவே 2 பஸ்கள் லாகூருக்கு ஓடிக் கொண்டுதான்இருக்கின்றன. வாரத்தில் செவ்வாய், புதன், வெள்ளி, சனி ஆகிய 4 நாட்களில்தான் இந்த 2 பஸ்களும் லாகூருக்குப்பயணம் செய்கின்றன.
இந்திய-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக, பிப்ரவரி 1999ல் முதன் முதலாகபிரதமர் வாஜ்பாய்தான் டெல்லியிலிருந்து லாகூருக்கு பஸ் பயணத்தைத் துவக்கி வைத்தார். அதோடு அந்த முதல்பஸ்ஸிலேயே லாகூருக்குச் சென்று, அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பையும் சந்தித்து, "ஹாய்"சொல்லிவிட்டு வந்தார் வாஜ்பாய்.
இடையிடையே காஷ்மீர் தீவிரவாதிகள் மிரட்டியும் உருட்டியும், இந்த பஸ் போக்குவரத்தைத் தடுக்க முயற்சித்தனர்.ஆனாலும், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், பலத்த பாதுகாப்புடன் இன்னும் பஸ் ஓடிக் கொண்டுதான்இருக்கிறது.
டெல்லியில் ஏறினால் 12 மணி நேரத்தில் லாகூரைச் சென்றடையும் இந்த "குளுகுளு" பஸ்ஸில் பயணம் செய்யரூ.800 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 1999-லிருந்து இதுவரை இந்த 2 பஸ்களும் 15,000 "டிரிப்"புகள்அடித்துள்ளன.
பாகிஸ்தானும் சும்மா இருந்து விடவில்லை. அதுவும் தன் பங்கிற்கு, இது போலவே, வாரத்திற்கு 2 பஸ்களை, 4நாட்கள் லாகூரிலிருந்து டெல்லிக்கு இயக்கிக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் சுற்றுலா வளர்ச்சித் துறைதான் இந்தஏற்பாட்டைச் செய்துள்ளது.
லாகூரிலிருந்து கிளம்பும் பஸ், இந்திய எல்லையைத் தொட்டதும், பஞ்சாப், டெல்லி மற்றும் ஹரியானாவிலிருந்துவரும் போலீஸார் இந்தப் பஸ்ஸில் ஏறுவார்கள். முழுப் பாதுகாப்புடன் பயணிகளை டெல்லியில் இறக்கினால்தான்இவர்களுக்கும் நிம்மதி.
தற்போது இந்த பஸ் போக்குவரத்து ரொம்பவும் பேமஸாகிவிட்டது. இப்படி 2 நாடுகளுக்கும் பஸ் போக்குவரத்துநடப்பதால், 2 நாட்டுப் பயணிகளும் சந்தோஷமாக உள்ளனர்.
இந்நிலையில்தான், மேலும் 2 பஸ்களை டெல்லி டூ லாகூருக்கு விடப்போவதாக டெல்லி போக்குவரத்துக் கழகம்கூறியுள்ளது. மேலும், வாரத்திற்கு 4 நாள் என்பதற்குப் பதில், வாரம் முழுவதும் பஸ்களை 2 மார்க்கத்திலும்இயக்குவதற்கு 2 நாடுகளுமே யோசித்து வருகின்றனவாம்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு












Click it and Unblock the Notifications