துபாயில் 7000 இந்தியர்களுக்கு பொதுமன்னிப்பு

Subscribe to Oneindia Tamil

துபாய்:

துபாயில் அனுமதியின்றி வசிக்கும் இந்தியர்கள் பயன்பெறும் வகையில் பொதுமன்னிப்பு வழங்கும் திட்டத்தைஅடுத்த ஒரு மாதத்துக்கு நீட்டித்துள்ளதாக ஓமன் குடியேற்றத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து துபாயில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் கூறியதாவது:

பொதுமன்னிப்பு வழங்கும் நாட்களின் எண்ணிக்கை அடுத்த ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் இங்குஅனுமதியில்லாமல் வசித்து வரும் இந்தியர்கள் தங்கள் சொந்த நாடு திரும்ப வசதியாக இருக்கும்.

மஸ்கட்டில் உள்ள இந்தியத் தூதரகம், பொதுமன்னிப்பு பெற்று மக்கள் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பும்வகையில் சான்றிதழ்களை வழங்கி வருகிறது.

முன்னதாக, ஏப்ரல் 19 ம் தேதி தொடங்கப்பட்ட பொதுமன்னிப்பு வழங்கும் திட்டம் ஜூன் 16 ம் தேதி வரை அமலில்இருந்தது.

அனுமதியின்றி ஓமனில் குடியிருந்து வரும் இந்தியர்கள் மேல் எவ்வித குற்றச்சாட்டுக்களும் இல்லாத பட்சத்தில்அவர்கள் குறிப்பிட்ட அபராதத் தொகையான ஒரு நாளைக்கு 25 ஓமானி ரியால்ஸைக் (ரூ.3000) கட்டி விட்டுதங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பலாம்.

தற்போது ஜூன் 30 ம் தேதி வரை வழங்கப்படவிருந்த பொதுமன்னிப்பு ஜூலை 18 ம் தேதி வரைநீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுவரை நாங்கள் 4,600 பேருக்கு மட்டுமே சான்றிதழ்கள் வழங்கியுள்ளோம். ஏற்கனவே 2,500 இந்தியர்கள்பொதுமன்னிப்பு பெற்று இந்தியா திரும்பி விட்டனர்.

நாங்கள் 6,500 முதல் 7000 வரை இந்தியர்களை பொதுமன்னிப்பு பெற வைத்து இந்தியாவுக்கு அனுப்பதிட்டமிட்டுள்ளோம். 1998 ம் ஆண்டும் இதே போல் ஓமன் மூன்று மாத பொதுமன்னிப்பை அறிவித்திருந்தது.இதில் 7000 இந்தியர்கள் பயனடைந்தனர்.

தற்போது 3,00,000 இந்தியர்கள் ஓமனில் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கூலி வேலை செய்பவர்கள்என்றனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+