திருமாவளவன் திடீர் கைது
சென்னை:
விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் நிறுவனரும், தலைவருமான திருமாவளவன் முன்னெச்சரிக்கைநடவடிக்கையாக வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் மாநில பொருளாளர் முடக்கத்தான் பாண்டியன் இந்த மாதம் 18ம் தேதிமதுரையில் படுகொலை செய்யப்பட்டார்.
அந்த படுகொலையைக் கண்டித்து வெள்ளிக்கிழமை சென்னையில் கண்டன ஊர்வலம் நடத்தப்படும் என விடுதலைசிறுத்தைகள் அமைப்பின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் நிறுவனரும், தலைவருமான திருமாவளவனும், கட்சி பிரமுகர்கள்20 பேரையும் போலீசார் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
சட்டம், ஒழுங்கு நிலையை கருத்தில் கொண்டு முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
மதுரையில் வெள்ளிக்கிழமை விடுதலை சிறுத்தைகள் சார்பில் பந்த் நடைபெறவிருப்பதால், அசம்பாவிதம் எதுவும்நடைபெறாமல் தடுப்பதற்காக தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா உதவி:
இந்நிலையில் மதுரையில் படுகொலை செய்யப்பட்ட முடக்கத்தான் பாணடியனின் மனைவிக்கு முதல்வர்ஜெயலலிதா அரசு சார்பில் ரூ 1.50 லட்சம் வழங்கியுள்ளார். இந்த தொகையை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர்பாண்டியன் மனைவியிடம் வியாழக்கிழமை கொடுத்தார்.
பாணடியன் மனைவிக்கு சத்துணவு ஆயா வேலையும் வழங்க ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications