For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வீரப்பனை தனிமைப்படுத்த அதிரடிப்படை முயற்சி

By Staff
Google Oneindia Tamil News

ஈரோடு:

வீரப்பனைத் தனிமைப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளோம். எங்களது தற்போதைய செயல்பாடுகள்அனைத்தும் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது என ஐ.ஜி விஜயகுமார் தெரிவித்தார்.

வீரப்பனைத் தேடும் பணி வியாழக்கிழமை முதல் துவங்கியது. இந்த பணியில் அதிரடிப்படையின்ஐ.ஜி.,விஜயகுமார் கடம்பூர் பகுதியில் நுழைந்தார். இவர் கடம்பூர் முகாமிலிருந்து புறப்படும்போது வீரப்பன்குறித்த நடவடிக்கைகள் குறித்து அளித்த பேட்டியில்,

வீரப்பன் நடவடிக்கை குறித்து தற்போது எதுவும் தெரிவிக்க இயலாது. தேடுதல் வேட்டையில் ஏற்படும்முன்னேற்றம் குறித்து உரிய நேரத்தில் தெரிவிப்போம். இப்போது எல்லமே ரகசியம் தான் என பதிலளித்தார்.

சந்தன வீரப்பனைப் பிடிக்கும் பணியில் சத்தியமங்கலத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடம்பூர்மலைப் பகுதியிலிருந்து விஜயகுமார் தனது பணியைத் தொடங்கினார். இவுரது தலைமையில் ஒரு குழுவும், எஸ்.பி.,தமிழ்ச் செல்வன் தலைமையில் ஒரு குழுவும் வீரப்பனைத் தேடும் பணியைத் தொடங்கின. 16 குழுக்களாகஅதிரடிப்படையினர் தற்போது காட்டுக்குள் முற்றுகையிட்டுள்ளனர்.

ஒரு பிரிவைச் சேர்ந்த அதிரடிப்படை வீரர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தேவைப் படும்இடங்களுக்கு எந்த நேரத்திலும் அழைக்கப்படலாம். இந்த முகாம் வீரர்கள் 24 மணி நேரம் தயார் நிலையில்உள்ளனர்.

இந்த நிலையில் காட்டுப் பகுதியில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டு அனுப்பப்படுகிறது.பண்ணாரி, கடம்பூர், அந்தியூர், பர்கூர், சோதனைச் சாவடிகளில் வாகனத் தணிக்ககை தீவிரமாக அமல்படுத்தப்பட்டுவருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X