திருமாவளவன் கைது: ப.சிதம்பரம் கண்டனம்
சேலம்:
விடுதலை சிறுத்தைகள் அமைப்புத் தலைவர் திருமாவளவன் கைது செய்யப்பட்டதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயகப்பேரவை தலைவர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
வரும் ஜூலை 15ம் தேதி வரை நான் தமிழகம் முழுவதும் இன்னும் 27 மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறேன்.இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம், மற்றும் கொள்கைகளை ஏற்றுக் கொள்பவர்கள் யாராக இருந்தாலும் இதில்அவர்களை இணைப்பதற்காகத்தான்.
அரசியல் நாகரீகம் கருதி தற்போதைக்கு அதிமுக அரசை விமர்சிக்க மாட்டேன்.
காமராஜர் ஒரு புதிய அரசை 6 மாத காலத்திற்கு விமர்சிக்கக் கூடாது எனக் கூறியுள்ளார். ஆனால், நான் 100 நாட்களுக்கு மட்டுமேவிமர்ச்சிக்க மாட்டேன். 100 நாட்களுக்குப் பிறகு விமர்சனம் செய்வேன்.
விடுதலைச் சிறுத்தைகள் மாநில அமைப்பாளர் திருமாவளவன் கைது செய்யப்பட்டது தேவையற்றது. தன் அதிருப்தியைவெளிப்படுத்த அவர் பந்த் அறிவித்தார். அப்படியே கைது செய்தாலும் 15 நாள் சிறை வைப்பது தேவையற்றது.
அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும். விடுதலைச் சிறுத்தை மாநில பொருளாளர் பாண்டியன் கொலை செய்யப்பட்டதுகண்டனத்திற்குரியது. குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றார் சிதம்பரம்.