இலவச வேட்டிகள் பதுக்கல்: தாமரைக்கனி மீது வழக்கு
ஸ்ரீவில்லிப்புத்தூர்:
ஏழை விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய இலவச வேட்டி, சேலைகளை அவர்களுக்கு வழங்காமல் பதுக்கி வைத்தகாகமுன்னாள் எம்.எல்.ஏ. தாமரைக்கனி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக அவர் கைது செய்யப்படலாம்என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்ற ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏழை விவசாயிகளுக்கு வழங்குவதற்காக, ஸ்ரீவில்லிப்புத்தூர் தாலுகாஅலுவலகம் 12,567 வேட்டிகளும், 17,332 சேலைகளையும் ஸ்ரீவில்லிப்புத்தூர் நகராட்சிக்கு வழங்கியது.
சென்ற 13ம் தேதி நகராட்சி கூட்டம் நடக்கவிருந்தது. ஆனால் அன்று காலை 8 மணிக்கு அலுவலகத்திற்கு வந்த தாமரைக்கனிமன்றக்கூட்டத்தை ஒத்தி வைத்துவிட்டு அறையை பூட்டி சாவியை எடுத்துச் சென்றுவிட்டனர்.
இதையடுத்து துணைத்தலைவர் தலைமையில் கூட்டத்தை நடத்த வேண்டும் என நகராட்சி கமிஷனரிடம் கவுன்சிலர்கள்கோரிக்கை விடுத்தனர். அதற்கு அனுமதி அளிக்க கமிஷனர் மறுத்துவிட்டார்.
இந்நிலையில் நகராட்சி தலைவர் அறையின் கழிப்பிடத்தில் இலவச வேட்டி, சேலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்துவிசாரணை நடத்த வேண்டும் என கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
பூட்டப்பட்டுள்ள நகராட்சி தலைவரின் அறைக்கு கவுன்சிலர்கள் மேலும் ஒரு பூட்டு போட்டு பூடிடவிட்டு சென்று விட்டனர்.
சென்ற 20ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த தாமரைக்கனி தனது அறையை திறக்கவிடாவிட்டால் பஸ் மறியலில் ஈடுபடப்போவதாகஅறிவித்தார்.
இந்நிலையில் சிவகாசி வருவாய் துறை ஆணையர் அணாணாதுரை முன்னிலையில் பூட்டை உடைத்து அறையை சோதனைசெய்தனர். அப்போது 157 வேட்டிகள் கைப்பற்றப்பட்டது.
இலவச வேட்டிகளை ஏழைகளுக்க வழங்காமல் பதுக்கி வைத்து மோசடி செய்ததாக நகராட்சி தலைவரான தாமரைக்கனி மீது,நகராட்சி பொறுப்பு வகிக்கும் மனோ சந்திரன் ஸ்ரீவில்லிப்புத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து தாமரைக்கனி மீது நம்பிக்கை மோசடி பிரிவில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாகதாமரைக்கனி கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications