For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாண்டிச்சேரி விடுதலை சிறுத்தைகள் பந்த்திற்கு ஓரளவு ஆதரவு

By Staff
Google Oneindia Tamil News

பாண்டிச்சேரி:

விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் நிறுவனரும் தலைவருமான திருமாவளவனை விடுவிக்கக்கோரி விடுதலைசிறுத்தை அமைப்பினரும், எதிர்க்கட்சியினரும் திங்கள்கிழமை பாண்டிச்சேரியில் நடத்திய பந்திற்கு ஓரளவு ஆதரவுகாணப்பட்டது.

இந்த அமைப்பின் மாநில பொருளாளர் முடக்கத்தான் பாண்டி சில தினங்களுக்கு முன் மதுரையில் படுகொலைசெயய்யப்பட்டார்.

இக்கொலைச் சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அமைப்பின் தலைவர் திருமாவளவன் அறிவித்திருந்தார். ஆனால் பந்த் நடத்தப்படுவதாகஅறிவித்திருந்ததற்கு முதல் நாளே முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக அவர் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார்.

அவரை விடுதலை செய்ய வேண்டும் என கடந்த 4 நாட்களாக விடுதலை சிறுத்தை அமைப்பினர் தமிழகத்தின் பலபகுதிகளிலும் போராட்டம் நடத்தி வருகின்றனர். பஸ்கள் மீது கற்களை வீசியும், அவற்றுக்குத் தீ வைத்தும்வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் திங்கள்கிழமை பாண்டிச்சேரியில் நடத்திய பந்த்திற்கு ஓரளவு ஆதரவுதான்கிடைத்தது. பஸ்கள், டாக்சி மற்றும் அனைத்து வாகனங்களும் காலை முதலே இயங்கவில்லை. ஆனாலும் போலீஸ்காவலுடன் பாண்டிச்சேரி அரசு பஸ்களும், சில தனியார் பஸ்களும், ஆட்டோ ரிக்ஷாக்களும் நண்பகல் 12 மணிமுதல் இயங்க ஆரம்பித்தன.

இருப்பினும், தமிழக அரசு பஸ்கள் எதுவும் பாண்டிச்சேரிக்கு வரவில்லை. அனைத்துக் கடைகளும், வர்த்தகநிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன. பல தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

தனியார், அரசு அலுவலகங்களுக்கும், ஜவுளி நூற்பாலைகளுக்கும் குறைவானவர்களே பணிக்கு வந்திருந்தார்கள்.

சட்டம்--ஒழுங்கு நிலையைப் பாதுகாக்க போலீசார் விரிவான ஏற்பாடுகள் செய்திருந்தனர். முன்னெச்செரிக்கைநடவடிக்கையாக 150 விடுதலைச் சிறுத்தை அமைப்பு தொண்டர்களை போலீசார் கைது செய்திருந்தனர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X