For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரயில் விபத்து: விசாரணை ஆரம்பம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கோழிக்கோடு அருகே கடலுண்டி ஆற்றுப் பாலத்தில் நடந்த ரயில் விபத்து குறித்த முதற்கட்ட விசாரணையை ரயில்வே பாதுகாப்புஆணையர் திங்கள்கிழமை தொடங்கிவிட்டதாக என்று மத்திய ரயில்வே அமைச்சர் நிதிஷ்குமார் கூறினார்.

இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

ரயில் விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விசாரணை திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை நடைபெறும்.இந்த விசாரணையின் அறிக்கை ஒரு வாரத்திற்குள் தயாராகி விடும். அதற்குப் பின்னர், ரயில் பாதுகாப்புத் தலைமை ஆணையரும்இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தவுள்ளார்.

இந்த விபத்துக்கு யாராவது காரணமாக இருந்து கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்.

உடைந்து போன இந்தப் பாலம் விரைவில் சீரமைக்கப்பட்டு விடும். கண்ணா கமிஷன் அறிக்கையின்படி, நாட்டில் இன்னும் 14ரயில் பாலங்கள் இன்னும் பழுதடைந்த நிலையிலேயே உள்ளன.

விபத்தில் இறந்து போனவர்களின் எண்ணிக்கை பற்றிய குழப்பம் இன்னும் நிலவுகிறது. சில உடல்கள் 2 தடவை எண்ணப்பட்டதும்இந்தக் குழப்பத்திற்குக் காரணம் என்று தெரிகிறது. ஆனாலும், இறந்தவர்களின் எண்ணிக்கை 54க்குள்தான் இருக்கும் என்றார்நிதிஷ்குமார்.

இதற்கிடையே, இந்த ரயில் விபத்து பற்றிய நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கேரள சட்டசபை எதிர்க்கட்சித்தலைவர் அச்சுதானந்தன் என்று கோரியுள்ளார்.

யு.என்.ஐ

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X